விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 11, 2010

சிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்

சிங்கம் திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் உலவிய ஒரு குறுந்தகவல் (SMS)  மிக பிரபலமானது. அது எனக்கும் வந்தது.  நண்பர் ஒருவர் உதவியோடு, என் கற்பனையையும் பயன்படுத்தி அந்த குறுந்தகவலை காட்சிப்படுத்தி இருக்கிறேன். 

Disclaimer: வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே... சீரியஸா எடுத்துக்காதீங்க...




















பாக்குறியா?
:
:
:
பாக்குறியா?
:
:
:








































சிங்கம்.....சிங்கம்.....நீ இப்போ...அசிங்கம்....









பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 8, 2010

விஜய்யும் நானும் ஒன்னு...


விஜய்யும் நானும் ஒன்னு என்றவுடன், யார்டா இவன், இன்னொரு காமெடியன் என்று கிளம்பி விடாதீர்கள். எனக்கும் விஜய்க்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான். பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது எனது ஐம்பதாவது பதிவு. பதிவெழுத தொடங்கி சுமார் நான்கறை மாதங்கள் ஆகின்றன. எனக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கும் அளவிற்கு திறமை கிடையாது. ஏனோதானோவென்று ஒரு கோர்வை இல்லாமல் சொல்ல வந்த கருத்துக்களை தட்டு தடுமாறியே சொல்லி இருக்கிறேன். அதனை பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு படித்து புரிந்து கொண்ட வாசக நண்பர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து படித்து, பாராட்டி பின்னூட்டமிட்டு, விமர்சித்து, என் தவறுகளை சுட்டிக்காட்டிய சக பதிவுலக நண்பர்களுக்கும், என் போன்ற கத்துக்குட்டிகளை தட்டிக்கொடுத்து உத்வேகம் கொடுத்த மூத்த பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். பின் வழக்கம்போல் என் பதிவுகளுக்கு செய்திகளை வாரி வாரி வழங்கிய, முதல்வர் கலைஞர், டாக்டர் விஜய், ஐபிஎல், லலித் மோடி, ஆங்கில பட இயக்குனர் மற்றும் இன்ன பிற பிரபலங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என் பதிவில் பாலோயர்கள் லிங்கை இணைக்க முடியவில்லை. எனவே என்னை தொடர்பவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி யாராவது இருந்தால் உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்பார்க்கிறேன். 

நண்பர் வரவழைத்த குபீர் சிரிப்பு. 


இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் உண்மையா என்று தெரியாது. ஆனால் கேட்டவுடன் எனக்கு குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. நம் விஜய டி.ராஜேந்தர் அவர்கள் தன்னுடைய வீராசாமி என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம். வீராசாமி பாத்திரத்தில் கூட அவரே நடிக்க போகிறாராம். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். இது உண்மையா? இல்லை நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதா? என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது தெளிவுபடுத்துங்களேன்? 


ஒரு மீள் பதிவு. 

இதுவரை ஐம்பது பதிவுகள் எழுதியாகி விட்டது. ஒரு சில பதிவுகளே உருப்படியான பதிவுகளாக எனக்கு திருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. நான் முதன் முதலில் எழுதிய ஒரு பதிவு நான் என்ன இளிச்சவாயனா? இதன் இரண்டு பாகங்களையும் இங்கே மீள் பதிவு செய்கிறேன்...


நான் என்ன இளிச்சவாயனா? இந்த கேள்விய எப்பல்லாம் கேப்பிங்க? 

பொதுவா நம்மள யாராவது தெரிஞ்சே ஏமாத்துனா (நான் நம்ம அரசியல்வாதிகள சொல்லல) இந்த கேள்விய கேக்கலாம். ஆனா அப்போதெல்லாம் கேட்பது இல்லை . ஒரு சட்டத்த எல்லாரும் கடை பிடிக்கணும் அப்படின்னு சொல்லும்போது, யாருமே அத செய்யாம, நம்மை மட்டும் கடை பிடிக்க சொன்னா உடனே சொல்கிற வார்த்தை இது. அதாவது ஒருவன் நல்ல விசயங்களை செய்ய வேண்டுமானால் முதலில் அவனை சுற்றி உள்ள எல்லோரும் அதை செய்ய வேண்டும். முதலில் எவன் செய்கிறானோ அவனை அந்த சமூகமே இளிச்சவாயன் என்று அன்போடு அழைக்கும். இல்லை நாமே நம்மை அந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். இது நான் சொன்னது அல்ல. நம்ம மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வேதனைக்குரிய விஷயம். கண்டிப்பாக செய்ய வேண்டிய செயலுக்கே இப்படி ஒரு கேள்வி கேட்டு செய்யாமல் இருக்க வழி தேடும்போது, நாமே மனமுவந்து செய்ய வேண்டிய சில காரியங்களை எப்படி செய்ய முடியும்? சரி நம்மில் சிலருக்கு அப்படி மற்றவர்களுக்கு உதவும் மனம் இருந்தாலும் செய்யாமல் இருப்பதற்கு காரணங்கள் என்ன?

பட்டியலிடுவோம் நியாயமான காரணங்களை: 

1. எனக்கு நிறைய கடமைகள் இருக்கு 
2. என்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு. 
3. எனக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.
4. சின்ன வயசுல இருந்து கஷ்டம் தெரியாம வளந்ததுனால எனக்கு உலகத்த பத்தி தெரியல 
5. என்ன நிறைய செலவு செஞ்சு படிக்க வச்சவங்க ஆசைல மண் போட முடியாது. 
6. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆஸ்த்மா(இன்ன பிற நோய்கள்). இந்த நிலைமைல நான் போய் எங்க சேவைல ஈடுபடுறது ? 
7. நான் ஒருத்தன் நினைச்சா என்ன செய்ய முடியும்?
8. எல்லாத்துக்கும் மேல அரசாங்கம், அரசியல்வாதிகள் இருக்காங்க. 
9. அது வேற நாடு. என் நாட்டிலேயே என்னால் ஏதும் செய்ய முடியாது. அந்த நாட்டு மக்களுக்கே அக்கறை இல்லை.
10. அனுபவிக்க வேண்டிய சின்ன வயசு.

இப்படி நமக்கு சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவை நியாயமானதும் கூட.மேற்கூறியவற்றுள் ஒரு காரணம் இருந்தால் கூட நம் செயலை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் மேற்கூறிய அனைத்தும் ஒருவனிடம் இருந்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தானே? ஆம் எர்னஸ்டோவிடம் இவை அனைத்தும் உண்டு. 



ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். மருத்துவம் படித்தவர், பெண்களை வசீகரிக்கும் அழகு உடையவர், சாதாரண குடிமகன், இத்தனைக்கும் அவர் போராடிய கியூபா ஒன்றும் அவர் தாய்நாடு அல்ல. வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொல்லும் ஆஸ்த்மாவால் அவதிப்பட்டவர். கை நெறைய சம்பளம், கண்ணுக்கு நிறைவான மனைவி, சோபாவில் சாய்ந்து காலாட்டிக்கொண்டே அவர் கேட்டிருக்கலாம் "நான் மட்டும் என்ன இளிச்சவாயனா?" ஆனால் அவர் கேட்கவில்லை. தன்னை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்த ஒரு பள்ளி கட்டிடத்தின் நிலையை பார்த்து அங்கிருந்த ஒரு பணிபெண்ணிடம் " இந்த இடம் ஏன் இப்படி இருக்கு? இங்கு எவ்வாறு படிக்க முடியும்? நாம் வெளிய வந்தவுடன் இந்த இடத்தை சீர்படுத்துவேன்" என்று சொன்னாரே ஒழிய "எல்லாம் என் நேரம். நான் இப்போ எங்க எப்படி இருக்க வேண்டியவன்?" என்று கேட்கவில்லை.

எல்லோரும் சே குவேரா ஆக முடியுமா என்று கேட்கலாம். கண்டிப்பாக ஆக முடியாது. ஆனால் நம்மளவில் ஒரு காமன்மேனாக ஆகலாம். பிறருக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணம் கூறினால் அவை அனைத்தின் பின்னால் இருப்பது ஒரே ஒரு காரணம்தான். பரந்த மனம் இல்லை. ஒரு ஜென் குரு சொன்னது "நம்மில் பலர் கோப்பையின் பளபளப்பில் மயங்கி தேநீரை மறந்து விடுகிறோம்."

இன்று பல பேருடைய சட்டையை அலங்கரிப்பது இந்த படம்தான் ஆனால் இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் என்றே பலர் கருதுகின்றனர். உண்மையான ஒரு ஹீரோவின் உருவம் வெறும் அலங்காரத்திற்கு பயன் படுவது வேதனைக்குரியது. இவரது வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள். திரைப்படங்களை மிஞ்சும் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி ஆக சித்தரிக்கப்பட்டு இன்றைய தலை முறையிடம் இருட்டடிக்கப்படுகிறார். சே குவேரா தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது, பெயர் புகழுக்காக அல்ல. மானிட குலத்தின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் மட்டுமே. இனி ஒவ்வொரு முறையும் நான் என்ன இளிச்ச வாயனா? என்ற கேள்வி தோன்றும் போது, இவரின் முகம் உங்கள் கண் முன் தோன்றட்டும்.

நம்மால் செய்ய முடியாத சாகசங்கள் எதுவும் நிகழ்த்திகாட்ட வேண்டாம். செய்ய முடிந்த காரியங்களை வாய்ப்பு வரும்போது தட்டி கழிக்காமல் மனமுவந்து செய்தாலே போதும். 


முதல் பாகத்தில் எழுதப்பட்டது பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே சொல்லியாகி விட்டது (நான் ஆண் என்பதால்). அதனால் இரண்டாம் பாகம் பொதுவாக் இருக்கும் என நம்புகிறேன். 

பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் மற்றும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு பொருளாதாரமும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். வெறும் கையை வைத்துக்கொண்டு முழம் போடா முடியுமா. முழம் போடலாம். பதிவும் போடலாம். வேறு ஒன்னும் செய்து விட முடியாது. சரிதானே. 


நமக்கு நல்ல மனது. பணமும் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் நாம் இருப்பது ஒரு வெளி நாடு. அங்கே ஏற்கனவே அரசியல் குழப்பங்கள் கோடி கட்டி பறக்கின்றன. எந்த பிடி கிடைக்கும் எப்படி உச்சாணி கொம்புக்கு தாவலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. சிக்கினால் போதும் தரை டிக்கெட் எல்லாம் தடி எடுக்கிற தண்டல் காரன் ஆகிவிடும். (அஜித் விஷயத்தில் நடந்த மாதிரி). போதும்டா சாமி. நல்லது செய்யப்போய் உதை பந்து ஆகி விடுவோம். சும்மா இருப்பதே மேல். பொம்பளதானே என்று ஆளாளுக்கு மட்டம் தட்டுகிறார்கள். எகத்தாளம் வேறு. என்ன செய்வது? பேசாமல் இப்போது இருப்பதே மேல். தேவை இல்லாமல் மாட்டிக்கொள்ள நான் என்ன இளிச்சவாயனா? (மன்னிக்கவும் பெண்பால் தெரியவில்லை).

சேவை செய்ய போகிறேன் என்று தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோது கையில் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது அக்னஸ்-இன் கைகளில். தன்னை காப்பாத்தி கொள்ளும் அளவுக்கு கூட பொருள், பின்புலம் இல்லாத நிலையில் அவரிடம் இருந்தது அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டும் தான். தனக்காக யாசகம் கேட்கவே தயங்கும் நேரத்தில் பிறருக்காக தெரு தெருவாக யாசகம் கேட்டு அலைந்தவர். யாசகம் கேட்ட கையில் காறி துப்பியவனை பார்த்து "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று சொல்லாமல் "இது எனக்கு போதும். என் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கள்." என்று கேட்டவர். அவரின் அன்புள்ளத்தை அறியாமல் தெரேசா மத மாற்றம் செய்கிறார் என்று சேற்றை வாரி இறைத்தபோதும், புத்தம் புதிய காரை போப் பரிசாக கொடுத்தபோதும், எந்தவித சலனமும் ஏற்படாமல் தன் சேவையே கண்ணாக இருந்தவர். 


வயதான சொந்த தாய் தந்தையரையே தொட்டு பராமரிக்க கூசும் மனிதர்கள் மத்தியில், தொழு நோயாளிகளை எந்த வித தயக்கமும் இல்லாமல் தொட்டு அரவணைத்தவர். தொழு நோயாளிகளை தொடும் போதெல்லாம் கடவுளையே தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சொல்வார். உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று உண்டென்றால் அது உதாசீனம்தான். அதுவும் நோயால் பீடிக்க படும் போது நம் மனம் நம்முடைய உறவுகளை நோக்கித்தான் செல்லும். அப்போது உதாசீனப்படுத்தப்பட்டால் அது நோயின் வேதனையை விட அதிகமாக வலிக்கும். இதை முழுமையாக உணர்ந்தவர். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் உண்டு. ஆனால் உலகத்தில் பிறந்த அனைவருக்கும் கிடைத்த ஒரே தாய் .....அன்னை தெரேசா.

இப்போதும் உலக அழகிகள் பட்டம் வெல்ல வேண்டுமா? அவர்கள் சொல்வது "எனக்கு பிடித்த பெண் தெரேசா தான் "
இப்படி பட்டம் வெல்ல மட்டுமே அவர் பெயர் பயன் படக்கூடாது. எல்லோராலும் தெரேசா ஆக முடியாது. ஆனால் எல்லோராலும் அன்பு செய்ய முடியும். அன்னை அவர்கள் சொன்னது "நீ மனிதர்களை பற்றி மதிப்பீடு செய்து கொண்டிருந்தால் ஒருக்காலும் அன்பு செய்ய உனக்கு வாய்ப்பிருக்காது"

அன்பு காட்டுவதற்கு பணம் தேவை இல்லை. உள்ளம் நிறைய கருணை இருந்தால் போதும். அன்பு செய்தால் எல்லோரும் தெரேசாவாகலாம் 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 7, 2010

வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்


சில வருடங்களுக்கு முன் ஆங்கில பட டிவிடிக்கள் வாங்க பர்மா பஜார் சென்றேன். பொதுவாக விலை குறைவான டிவிடிகளில் மூன்று அல்லது நான்கு படங்கள் இருக்கும். அதில் ஒரு படம் மட்டும் நல்ல படமாகவும், மற்றவை மொக்கை படமாகவும் இருக்கும். அப்படி நான் வாங்கிய ஒரு டிவிடியில் இருந்த ஒரு படத்தை பற்றிதான் இந்த பதிவு. நாம் பார்க்க நினைத்த படத்தை பார்த்துவிட்டு அந்த டிவிடியில் இருக்கும் மற்ற படங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நம் பழக்கம். திடீரென இந்த படம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று நான் பார்த்த படம். படத்தின் பெயர் போலீஸ் அகாடெமி.



வசூல்ராஜா, Mein Hoon Na ஆகிய படங்களின் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கதாநாயகன் தன் குணாதிசயத்துக்கு பொருந்தாத செயல் செய்யும்போது அது காமெடி ஆகி விடுகிறது. கமலஹாசன் மற்றும் ஷாருக்கான் இருவரும் கல்லூரி மாணவராக நடித்ததே படத்தின் வெற்றிக்கு காரணம். கில்லி படத்தில் கூட பிரகாஷ்ராஜ் ஐ லவ் யு செல்லம் என்று சொல்லும்போது அவர் உருவத்திற்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாமல் போனதே மிகபெயர் பெற்றது. ஒரு பாத்திரமே இப்படி என்றால், படத்தில் வரும் அனைவரும் இந்த மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் கதை இதுதான். 


அந்த நகரத்துக்கு வரும் புது மேயர், காவல் துறையில் போதிய நபர்கள் இல்லாததால், பொதுமக்களில் யார் விருப்பப்பட்டாலும் போலீஸ் ஆகலாம். அதற்கு போலீஸ் அகடமியில் சேர்ந்தால் போதும் என்று அறிவிக்கிறார். இதனால் மக்களில் பலர் ஆர்வமாக அங்கு சேர்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் போலீஸ் ஆவதற்கு அடிப்படை தகுதி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நம் ஹீரோ மகோனியும் இணைகிறார். மகோனி ஒரு முரட்டு வாலிபன். அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்பவன். மகோனியின் தந்தை தெரிந்தவர் ஒருவர் மூலம் மகோனியை இங்கு அனுப்பினாலாவது திருந்தி விட மாட்டானா என்று அனுப்புகிறார். ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார். இந்த அகடமியில் இருந்து ஓடி வந்துவிட்டால் கடுமையான ஜெயில் தண்டனை அளிக்கப்படும். அதே சமயம் அவர்களாக துரத்தி விட்டுவிட்டால் பிரச்சனை இல்லை. மகோனியுடன் சேர்ந்து குறும்புக்கார திருடன் ஒருவன், மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன், அப்பாவி பெண் ஒருத்தி, ஏழரை அடி உயர மனிதன் ஒருவன் என்று பலபேர் அங்கு இணைகிறார்கள். 



இவர்களுக்கு பயிற்சி அளிக்க கேப்டன் ஹாரிஸ் என்பவர் வருகிறார். இவர் நம்ம வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி. டென்சன் பார்ட்டி. அகடமியில் சேர்ந்திருப்பவர்களை எல்லாம் மனிதனாக கூட மதிக்காதவர். மேயரின் இந்த அறிவிப்பு அவருக்கு பிடிக்கவில்லை. எனவே இவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து அவர்களை நீக்குவதே இவரின் நோக்கம். இவருக்கு ஒரு நிபந்தனை விதிக்க படுகிறது. அதாவது மகோனியை எக்காரணம் கொண்டும் நீக்க கூடாது. அவனாக ஓடிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆரம்பிக்கிறது போட்டி. ஹாரிஸ் ஒவ்வொரு முறையும் அவர்களை முட்டாளாக்க நினைத்து தானே முட்டாளாகிறார். இவருக்கு மகோனியை பிடிக்கவே இல்லை. என்ன செய்வது அவனை நீக்க முடியாது. வேண்டுமானால் அவனை கொடுமை படுத்தி ஓட வைக்கலாம். ஆனால் மகோனி எதற்கும் அஞ்சாதவன். ஹாரிஸ் என்ன செய்தாலும் எஸ்கேப் ஆகி விடுகிறான். கடைசியில் அனைவரும் போலீஸ் ஆனார்களா? ஹாரிஸ் என்ன ஆனார்? என்பதை வயிறு வலிக்க சொல்லி இருக்கிறார்கள்.


படத்தின் ஹீரோ மகோனிதான் என்றாலும், கேப்டன் ஹாரிசாக வருபவர் பின்னி எடுத்திருப்பார். இவரின் காரெக்டர் ஷோலே படத்தில் வரும் அஸ்ராணி மாதிரி வடிவமைக்க பட்டிருக்கும். ஒரு கடமை தவறாத, கறாரான காவல்துறை அதிகாரி மாதிரி தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விறைப்பாக இருப்பார். ஆனால் நமக்குத்தான் சிரிப்பாக வரும். படத்தின் இறுதி வரை தன் குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார். அதே போல படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. குறிப்பாக மிலிடரி ஆபிசராக வரும் டாக்ல்பேரி எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்குவது, மிமிக்ரி கலைஞராக வரும் லார்வேல் ஜோன்ஸ் திடீர் திடீரென மிமிக்ரி செய்வது போன்றவற்றை குறிப்பிடலாம். கடைசி வரை இவர்கள் பாத்திரம் மாறவே மாறாது.



சில தகவல்கள்...

இந்த படம் மொத்தம் ஏழு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் மூன்று பாகங்களை தாராளமாக பார்க்கலாம். மற்ற பாகங்கள் எல்லாம் சுமார் ரகம்தான். 


முதல் பாகம் வெளிவந்த ஆண்டு 1984. முதல் பாகத்தின் இயக்குனர் ஹக் வில்சன். அசால்ட்டாக ஆரம்பித்த ஒரு படம் மிகப்பெரும் வெற்றி பெரும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.



முதல் பாகத்தின் வசூல் மட்டும் மற்ற அனைத்து பாகங்களின் மொத்த வசூலை விட அதிகம். 


மிகைப்படுத்தப்படாத காமெடி காட்சிகள் படத்தின் பெரிய பலம். நேரம் கிடைத்தால் பாருங்கள்...



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

June 2, 2010

திக் திக் திக் திரைப்படம்...


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆங்கில படத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு படம் முழுவதும் சீட் நுனியில் அமர்ந்து பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா? படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, "போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான்?" என்று கத்தியதுண்டா? படத்தில் வரும் வில்லனை கூட விரும்பியதுண்டா? அப்படி எல்லா அனுபவத்தையும் தரும் ஒரு படத்தை பற்றிதான் சொல்ல போகிறேன். இந்த படம் வெளி வந்து பலகாலம் ஆகிறது. ஆனால் சென்ற ஆண்டுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்கள்தான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையை சேர்ந்தது இந்த படம். படத்தின் பெயர் ட்யுயல் (Duel). 


கதை என்னவென்றால், டேவிட் மான் என்னும் ஒரு தொழிலதிபர், பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரை தொழில் நிமித்தமாக பார்க்க தனியாக காரில் செல்கிறார். போகும் வழியில் கலிபோர்னியா பாலைவனத்தை கடக்க நேர்கிறது. அவர் போவது பட்ட பகலில் என்றாலும், சாலையில் ஒரு காக்கை குருவி கூட கிடையாது. தன்னந்தனியாக சுள்ளென்று அடிக்கிற வெயிலில் ஜாலியாக கிளம்புகிறார். போகிறவழியில் ஒரு பழைய ட்ரக் ஒன்று ரோடை அடைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் செல்கிறது. மேலும் கரும்புகையை வேறு கக்கியபடி செல்கிறது. அதனை பின் தொடர முடியாமல் ஹாரன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல், சரக்கென்று முந்தி சென்று விடுகிறார் டேவிட். மறுபடியும் பயணம் தொடர்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அவர் முந்திய ட்ரக் அசுர வேகத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. சரக்கென இவரை முந்திவிட்டு மறுபடியும் ஆமை வேகத்தில் செல்கிறது. கடுப்பான டேவிட் மறுபடியும் முந்துகிறார். பிடித்தது சனி. 



ட்ரக் இவரை ஈவ் டீசிங் செய்ய ஆரம்பிக்கிறது. மூர்க்கத்தனமாக துரத்துவது, முட்டுவது போல நெருங்கி வருவது, பின் திடீரென கண்ணில் இருந்து மறைவது என்று மிரட்டுகிறது. வேலை வேட்டியில்லாதவன் எவனோ விளையாடுகிறான் என்று சாலை ஓரக்கடை ஒன்றில் இருக்கும் தொலைபேசியில் போலீஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். திடீரென அந்த ட்ரக் பலமாக டெலிபோன் பூத்தில் மோதுகிறது. மயிரிழையில் டேவிட் தப்பிக்கிறார். துரத்துபவன் வேலை வெட்டி இல்லாத சாதாரணமானவன் அல்ல, சரியான பைத்தியகாரன் என்பது புரிகிறது. அவசரமாக காரில் ஏறி பறக்கிறார். மறுபடியும் துரத்தல் விளையாட்டு. இதில் இருந்து எப்படி டேவிட் தப்பித்தார் என்பதைத்தான் ஒன்னரை மணிநேர மிரட்டலாக சொல்லி இருக்கிறார்கள்.


படம் முழுவதும் பொட்டல் காட்டில் நீண்ட சாலையிலேயே நடக்கிறது. படத்தின் பெயர் காரணம் படத்தை பார்க்கும்போதே புரிந்துவிடும். படத்தில் ஒரு ஹீரோ அது டேவிட், வில்லன் அந்த ட்ரக். மற்றபடி குறிப்பிடும் படியான நடிகர்கள் யாருமே இல்லை. முதலில் என்னடா கேமராவை காரில் இணைத்து விட்டார்களோ என்று தோன்றும். பின் அதுவே படத்தின் சுவாரசியத்துக்கு உதவியிருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் என்று ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு ட்ரக் வரும். இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதே அந்த மர்மதேச ட்ரக். படத்தில் டேவிட் படுகிற அவஸ்தையை நமக்கும் உண்டாக்கி இருப்பார் இயக்குனர். ட்ரக் திடீர் திடீர் என தோன்றுவதால், சாதாரண காட்சிகளில் கூட, திரையில் ஏதாவது ஒரு மூலையில் ட்ரக் வருகிறதா, தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்து விடுவோம். அந்த ட்ரக்கிடம் இருந்து தப்பிக்க நிறைய ஐடியா செய்வார். படம் பார்க்கும் நாமும்தான். ஆனால் அவை புஸ்வானமாகும்போது அந்த ட்ரக் மீது கோபம் வரும் பாருங்கள்? கடைசிவரை அந்த ட்ரக் ட்ரைவர் யார் என்று காட்டாததும் ஒரு சுவை.




சில தகவல்கள்..

இந்த படத்தை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். படம் வெளி வந்த ஆண்டு 1971. இந்த படம் பற்றி ஸ்பீல்பர்க் சொல்லும்போது, "தெரியாத ஒரு எதிரிக்குத்தான் நாம் மிகவும் பயப்படுவோம். அதையே இங்கு பயன் படுத்திகொண்டேன்." என்றார்.

படத்தில் வரும் காரையும், ட்ரக்கையும் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த காரின் சிகப்பு வண்ணம் சாலையில் தெளிவாக தெரியும். அதே நேரம் அந்த ட்ரக் மங்கலாக தெரியும். படம் பார்ப்பவர்களுக்கு தூரத்தில் வரும் ட்ரக் மங்கலாக தெரியும். அது ட்ரக்கா இல்லை நம் கற்பனையா என்று குழப்புவதற்கு இந்த ஏற்பாடு. அதே போல ட்ரக்கின் ஹெட் லைட்டுகள் பெரியதாக, பார்ப்பதற்கு யாரோ முறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணும். இதுவும் ஸ்பீல்பர்க்கின் வேலைதான்.


டேவிட்டாக வருபவர் டென்னிஸ் வீவர். ஓரளவிற்கு தைரியமான ஒரு ஆண்மகன் எப்படி பயப்படுவான் என்பதை காட்டி இருப்பார். 

படம் பலபேரின் பாராட்டுகளை பெற்றதோடல்லாமல் மிகுந்த வெற்றியும் பெற்றது. 

குறிப்பிடத்தக்க காட்சிகளாக சாலை ஓரத்தில் நிற்கும் ஸ்கூல் பஸ் காட்சி, ட்ரக் சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஆகியவையை சொல்லலாம். ஒன்னரை மணிநேர சுவாரசிய பொழுதுபோக்குக்கு கியாரண்டி. நேரம் கிடைத்தால் பாருங்கள். 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

June 1, 2010

ரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...


ரெய்னா செய்த தவறு....

முந்தாநாள் இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த ஒரு மொக்கை ஆட்டத்தை நிறையபேர் பார்த்திருக்கலாம். நானும் பார்த்து தொலைத்தேன். இலங்கை அணி ஏதோ பூர்வ ஜென்ம கடனை நிறைவேற்றுவது போல ஆடிக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் இந்த மைதானத்தில் முதலில் ஆடுபவர்கள் 300-க்கு மேலே எடுக்க முடியும் என்று கணிக்கப்பட்டது. விஷயம் அதுவல்ல. மைதானத்தில் அம்பயர், தில்ஷான் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்த ஒரு விஷயம் நடந்திருகிறது. இதை நான் கூட கவனிக்கவில்லை. உடன் பணி புரியும் நண்பர் ஒருவர் சொன்ன பிறகுதான் அறிந்தேன்.அது என்னான்னு கேக்குறீங்களா? அதாவது இலங்கை பேட்டிங் செய்யும்போது முதல் பத்து ஓவர் கட்டாய பவர் ப்ளே முடிந்ததும், அடுத்த ஐந்து ஓவர்களை பவர் ப்ளே ஆக நினைத்துக்கொண்டு பீல்டர்களை வட்டத்துக்குள்ளேயே நிற்க வைத்து பந்து வீச செய்தார் ரெய்னா. பதினாறாம் ஓவரில் தான் அம்பயர் இன்னும் பவுலிங் பவர் பிளேவை எடுக்கவில்லை என்றவுடன் திடுக்கிட்டார். பவர் ப்ளே எடுத்தவுடன் முதலில் அம்பயரிடம் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். ஒரு பக்கம் தில்ஷான் நமுட்டு சிரிப்பு சிரிக்க, ரெய்னா முகத்தில் ஈயாடவில்லை. அதாவது பவர் ப்ளே இல்லாமேலேயே பீல்டர்களை வட்டத்துக்குள் நிறுத்தியபடி ஐந்து ஓவர்களை வீசி இருக்கிறார். பின் பதினேழாம் ஓவரில் இருந்து பவுலிங் பவர் ப்ளே ஓவர்கள் வீசப்பட்டிருக்கின்றன. ஆக மொத்தம் இலங்கைக்கு வீசப்பட்டது 25 பவர் ப்ளே ஓவர்கள். 

இதில் கொடுமை என்னவென்றால் இது அத்தனையும் அறிந்த பிறகும் இலங்கை தன் மந்தமான ஆட்டத்தையே ஆடி இருக்கிறது. அதாவது முதலில் வீசப்பட்ட ரெய்னாவின் கற்பனை பவர் ப்ளேயில் இலங்கை எடுத்த ரன்கள் வெறும் 13. அடுத்து வீசப்பட்ட நிஜ பவர் ப்ளேயில் அவர்கள் எடுத்தது 41. சரி இலங்கை எப்படி வேண்டுமானாலும் ஆடி விட்டு போகட்டும். அது விஷயமில்லை. ஒரு சர்வதேச போட்டியில், ஒரு பள்ளி சிறுவன் போல செயல்பட்டுள்ள ரெய்னாவை என்னை சொல்வது? இதை ரெய்னாவிடம் சொல்ல வேண்டும் என்று அம்பயருக்கு எந்த கட்டாயமும் இல்லை. அவர் நினைத்திருந்தால் 40 ஆவது ஓவரில் சொல்லி இருக்கலாம். ஆனால் ரெய்னா மீதுள்ள பரிதாபத்தால் சொல்லி விட்டார் போலும். அப்படி நடந்திருந்தால் ஒருவேளை இலங்கை இன்னும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள் ரெய்னா!!!


சிங்கம் அசிங்கமா?


திரை உலகில் ஒரு பிரச்சனை என்றால் ரஜினி ஏதாவது சொல்லியே ஆக வேண்டும். பின் அவர் என்ன சொன்னாலும் கும்முவதற்கு பலர் காத்திருப்பார்கள். அதே போல, பதிவுலகில் மிகவும் எதிர்பார்க்கும் படம் வெளிவந்தால் அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டும் என்பது விதி. இல்லை என்றால் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி எழுதி விட்டாலும் சும்மா விடமாட்டார்கள். உனக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா? நீ பார்ப்பதுதான் உலக சினிமாவா என்று கும்மி விடுவார்கள். பொதுவாக திரை விமர்சனம் என்று நான் எதுவும் எழுதுவதில்லை. ஏனென்றால் திரைப்படங்களை நான் திரை அரங்குகளோடு மறந்து விடுவேன். நான் ஆங்கில படங்கள் பற்றி எழுதுவது கூட அப்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்தான். வெகு நாட்களுக்கு பிறகு இரண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் நான் பார்த்த படம் என்றால் அது சிங்கம்தான். சூர்யா ஒரு உலகமகா நடிகன், அடுத்த கமல், சாக்லேட் ஹீரோ என்பது ஒரு புறமும், சூர்யா அடுத்த விஜய், குள்ளமானவர், இவருக்கு அனுஷ்கா கேக்குதா என்று மறுபுறமும் விமர்சனம் வந்தாலும், படம் பார்க்கும் போது இவை அனைத்தும் மறந்து போவதென்பது உண்மை. வாழ்க்கையை, நிதர்சனத்தை உணர்த்தும் ஒரு படம் அல்ல. பொதுவாக எனக்கு மசாலா படங்களை பார்க்க பிடிக்கும். ஆனால் சமீபத்தில் வந்த சுறா, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களை பார்க்கும் போது ஏற்பட்ட எரிச்சல் இந்த படம் பார்க்கும் போது இல்லை என்பது உண்மை. சிங்கம் கம்பீரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னை பொறுத்தவரை அசிங்கம் இல்லை.



சீமான் செய்வது சரியா?

ஐஃபா விழாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என்று திரு சீமான் அவர்கள் போர்கொடி உயர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார் என்று சொல்லப்படுகிறது. எனக்கென்ன தோன்றுகிறது என்றால் திரை உலகினர் இந்த விழாவை புறக்கணித்து விட்டால் என்ன நடந்து விட போகிறது? அப்படி போகாதவர்கள் எல்லாம் உண்மையிலேயே தமிழ் உணர்வால்தான் போகவில்லை என்று கூற முடியுமா? அப்படியென்றால் போராட்டம் அறிவிக்கும் முன்பே அல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்? போகாதவர்கள் எல்லாம் நமக்கெதுக்கு வம்பு என்று விலகி உள்ளது போலவே தெரிகிறது. எதிர்ப்பை காட்ட வேண்டுமென்றால் அதற்கு இதுதான் வழியா? இது விளம்பரம் தேடிக்கொள்வதற்கான வழி என்றே தோன்றுகிறது. அரசியல் ரீதியாக காட்டப்படும் எதிர்ப்புக்குத்தான் உண்மையிலேயே பலன் கிடைக்கும். இலங்கைக்கு செல்லும் கப்பல்களில் சரக்கு ஏற்ற விடாமல் போராடுவாரா? இல்லை வணிக ரீதியாக இந்திய இலங்கை தொடர்புகளை எதிர்த்து போராடுவாரா? இன்னும் மறை முகமாக நட்பு பாராட்டும் தமிழக முதல்வரை எதிர்த்து போராடுவாரா? 



ஒரு பகடியும், ஒரு புனைவும், எதிர்வினைகளும்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு விஷயம் பதிவுலகில் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்களால் விவாதிக்கப்பட்டு பெரும் சாதி கலவரமாக உருவாகி உள்ளது. இந்த விஷயம் புகைய தொடங்கியதும் நான் ஆர்வமாக (ரோடில் யாராவது சண்டை போட்டால் எட்டி பார்ப்போமே அது போல) கவனித்தேன். மாறி மாறி வசைகள் பாராட்டுகள், தன்னிலை விளக்கம், மன்னிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறி விட்டன. ஒரு பக்கம் மானம், மரியாதை, ரோசம் என்றும், மறுபக்கம் ஆணாதிக்கம், பார்ப்பனியம் என்று ஆயுதத்தை தூக்கி கொண்டு மோதிக்கொள்கிறார்கள். இதில் யார் பக்கம் நியாயம் சொல்ல இயலாது. அவரவர்க்கு அவர்கள் சொல்வதுதான் நியாயம். ஆனால் பொதுவாக பலபேர் வந்து பார்க்கும் ஒரு வலைப்பதிவில் அபசகுனமான (நெகட்டிவான ) வார்த்தைகளை பயன் படுத்துவதையே நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ஆனால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிடுவது என்பது தவறானது. புனைவு அது இது என்று சொன்னாலும் பதிவானதை மாற்றவா முடியும்? சாலையில் நின்று கெட்ட வார்த்தையில் கத்தி பாருங்கள். ஒருவனாவது வந்து நீ படித்தவன்தானா? என்று கேட்பான். அதன் காரணம் படித்தவன் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது என்று பொருள். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. என்னதான் படித்து விட்டாலும், அடிமனதில் பதிந்த ஒரு சில விஷயங்கள் மாறாது. 



மேலே கூறிய விஷயம் என்ன என்று தெரியாதவர்கள் இந்த பதிவில் பாருங்கள்... போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க...

உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...