விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 30, 2010

இலங்கை கிரிக்கெட் தொடர், சூதாட்டம், சேவாக் சங்கக்காரா தொடர்பு...

டிஸ்க்:  தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.படங்கள், கருத்துக்கள் சிரிக்க மட்டுமே...






கீழே இருப்பது இது போனஸ்






பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...



முழுவதும் படிக்க >>

August 20, 2010

ஒரு புரட்(டு)சிகாரனின் புலம்பல்கள்....


டிஸ்க்:புலம்பல்கள் என்பதால் கொஞ்சம் கோர்வையாக இருக்காது. 

தயவு செய்து என்னை யாரும் புரட்சிக்காரன் என்று சொல்லாதீர்கள். நான் ஒரு புரட்டுக்காரன்.

எனக்கு கம்யுனிசம் பிடிக்கும். கம்யுனிஸ்டுகளை பிடிக்காது. நண்பர்களை பிடிக்கும். தோழர்களை பிடிக்காது. கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை கிடையாது. இவை எல்லாமே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். காலநிலை, மனநிலை பொறுத்து இவை மாறும். ஆகவே நான் ஒரு புரட்டுக்காரன். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் மாறியதே இல்லை. அது என் பண்பு. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அயோக்கியனாக இருந்தாலும் அவனும் ஒரு மனிதன்தான். அவனை இழித்துக்கூறவும், பழித்துககூறவும் ஆயிரம் காரணம் இருந்தாலும், இவற்றை செய்யாமல் இருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது நான் கற்ற பண்பு. 

மேலே சொன்ன பிடிக்காதுகள் எல்லாம் கொஞ்ச நாளாகத்தான் பிடிக்காதுகள் ஆகி இருக்கிறது. பதிவுகள் படிக்க ஆரம்பித்ததில் இருந்து. காரணம் கொஞ்சம் எழுத்து திறமையும், நாலு பேரின் ஆதரவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற செய்கைகள். முதலில் சமூகத்தில் பிரபலமாக உள்ள ஒருவரின் மீது காரித்துப்புவது. அது அவர் முகத்தில் படாது என்பது வேறு விஷயம். ஏன் என்றால் அவ்வளவு உயரத்துக்கு அண்ணாந்து துப்பினால் அது எங்கே விழும் என்று தெரிந்ததே. ஆனாலும் அந்த பிரபலத்தின் அபிமானிகள் கோபம் கொண்டு ஏதாவது சொல்லிவிட்டால், "ஆஹா சிக்கிட்டாண்டா அடிமை!!" என்று சுற்றி நின்று கொண்டு துப்புவது. 

"அட ஏன்டா துப்புர?" என்று இன்னொருவன் அவனுக்கும் அதுவே பரிசு. வெளிப்படையாவே சொல்கிறேன். ஒரு நடிகனுக்கோ, கிரிக்கெட் வீரனுக்கோ ரசிகனாக இருப்பது தவறில்லை. அவனுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பது, அவனை கடவுளாக கொண்டாடுவது தவறுதான். இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நோக்கம் என்றால் நேரடியாக எழுதி விட்டால் முடிந்தது. அதை விடுத்தது, ரஜினி வயசென்ன, அவன் அப்பன் வயசென்ன என்றெல்லாம் எழுதுவது உங்கள் நோக்கம் ரசிகனை திருத்துவதல்ல. எல்லோரும் கொண்டாடும் ஒருவரை வசை பாடி உங்கள் வக்கிரத்தை காட்டுவது என்பதை தெளிவு படுத்துகிறது. ஒரு பதிவில் கருத்துரையிட்ட ஒரு நண்பர் காந்தியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு கூறினார். உடனே வெகுண்டெழுந்த தோழர், ஸ்டாலின் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்லாதவன் இந்த காந்தி, துரோகி நாய் என்று ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் ஸ்டாலின் ஒரு மகாத்மா. ஸ்டாலின் மகாத்மாவாகவே இருந்து விட்டு போகட்டும். காந்தி என்ன நாயை விட கேவலமாக போய் விட்டாரா.

இன்னும் கொஞ்சநாள் போனால், சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரஜினியையும், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏ ஆர் ரகுமானையும், பாலச்சந்தர் என்ற பார்ப்பனர், பாட்டாளி வார்க்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள். அதாவது எங்கே ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டேளுந்து விடுவார்களோ என்று அஞ்சிய பார்ப்பன சக்தியான ரஜினி , ரகுமான் போன்றோர் திட்டமிட்டு திரைத்துறைக்கு வந்து, பொது மக்களின் மூளைகளை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். முடிந்த வரை காரி துப்பியாகி விட்டது. எவனாவது வந்து நாங்கள் எல்லாம் அப்படி இல்லை என்று சொன்னால், நான் உன்னை சொல்லவில்லை. உன் தலைவனையும் சொல்லவில்லை. முட்டாள் ரசிகனைப்பார்த்துதான் சொன்னேன் என்பார்கள்.

எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. யாரை பற்றியும் தெரியாது. பதிவுலகத்துக்கு வருமுன் ஒரு சில விஷயங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இப்போது அது சுத்தமாக போய் விட்டது. அவற்றில் ஒன்று கம்யுனிசம். அதற்க்கு காரணம் முதலாளிகள் அல்ல. கம்யுனிசம் பிடித்துவிட்டால் காந்தியை திட்ட வேண்டுமா என்ன? கடவுள் ஒரு மது போதையாம். தோழர் சொல்கிறார். சரிதான். கடவுளையும் மதுவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே தெரிந்து விடுகிறது உங்களின் தரம். கம்யுனிசத்தை மறுப்பவன் கண்டிப்பாக நமிதாவின் தொப்புளுக்கு அடிமையாகத்தான் இருப்பானாம். என்ன கீழ்த்தரமான எண்ணம். இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்தது கம்யுனிசமா இல்லை உங்கள் கண்ணியமான தோழர்களா? 

ஒன்று மட்டும் புரிகிறது, கம்யுனிசவாதியோ, முதலாளியோ, ஆத்திகனோ, நாத்திகனோ தான் வைப்பதுதான் சட்டம். தன் சித்தாந்தம் தான் சரி என்று நினைக்கிறான். அது பதிவுலகத்திலும்தான். கம்யுனிசத்தை எதிர்ப்பவர்கள் தங்களின் சூ..க்குள் தலையை நுழைத்துகொண்டவர்கள் என்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு தோழர் ஒருவர் புரட்சி மன்னிக்கவும், கடமையை செய்திருக்கிறார். அதாவது அவருக்கு புரட்சி என்பது பெரிய வார்த்தை. இதை கண்டதும் எழுந்த ஆதங்கத்திலேயே இந்த பதிவு எழுதி இருக்கிறேன். 

பி. கு. இதற்கு வரும் பின்னூட்டங்களில் ஆமாம் காந்தி நாய்தான், காரி துப்ப முடியாத அளவுக்கு ரஜினி என்ன அவ்வளவு உயரமா? ஈழத்தில் தமிழன் துன்புறுகிறான், போபால் பிரச்சனை சாதாரணமானதா போன்ற பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. இந்த பதிவின் இறுதியில் தனி மனித தாக்குதலும் இருக்கிறது. அதையும் ஒப்புக்கொள்கிறேன்.



முழுவதும் படிக்க >>

August 17, 2010

வெட்டி அரட்டை- தேர்ந்த நடிகர் சங்கக்காரா, சட்டம் தன் கடமையை செய்யும்



பொதுவாகவே பதிவுகளில் உருப்படியாக எதுவும் எழுதாவிட்டாலும், ஒரு முழு நீள கட்டுரையாக இல்லாமல் பிட்டு செய்திகள் எழுதுவதை இனி வெட்டி அரட்டை என்ற தலைப்பில் தரலாம் என்று எண்ணி இருக்கிறேன்.


தேர்ந்த நடிகர் சங்கக்காரா...


உப்பு சப்பில்லாத ஒரு படம் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது நேற்று நடந்த இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் ஆட்டம். இப்படி ஒரு மகா மட்டமான ஆட்டத்தை இரண்டு அணிகளுமே சமீப காலமாக வெளிப்படுத்தி வருகின்றன. அணியில் இருந்த பெருந்தலைகளின் இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். தம்புலா மைதானத்தில் இதற்கு முன் பல ஆட்டங்களில் நிறைய அணிகள் முன்னூறுக்கு மேல் எடுத்துள்ளன. வழக்கமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவசரப்பட்டு தன் விக்கெட்டை இழந்துவிடும் சேவாக் நேற்று நிதானமாக ஆடினார். 



ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற முப்பத்தைந்து ரன்களே எடுக்கவேண்டிய கட்டத்தில், சேவாக் சதம் அடிக்க இருபத்தைந்து ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும், சேவாக் அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கினார். கடைசியில் வெற்றிபெற ஐந்து ரன்கள் மட்டுமே தேவை, சேவாக் சதம் அடிக்க ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை அதுவரை அபாரமாக கீப்பிங் செய்து வந்த சங்கக்காரா தவற விட (!!??) பந்து பவுண்டரிக்கு சென்றது. இன்னும் ஒரே ஒரு ரன் தேவை. ரந்திவ் வீசிய பந்தை இறங்கி வந்து வெளியே அனுப்புகிறார் சேவாக். கடைசியில் அது நோ பால் என அறிவிக்கப்பட, சேவாக் அடித்த சிக்சர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது, நோ பாலில் கிடைத்த ஒரு ரன் மூலம் இந்தியா வென்று விட்டது என்று சொல்லி விட்டார்கள். சேவாக் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்.

சர்ச்சையை கிளப்பிய அந்த நோ பால் இதோ கீழே...


இது தெரியாத்தனமாக வீசப்பட்ட நோ பால் அல்ல என்பது டிவி ரீப்ளேயில் தெள்ள தெளிவாக தெரிந்தது. அதாவது பவுலரின் முன்னங்கால் லேசாக கிரீசுக்கு வெளியே சென்று விட்டால் அது தெரியாத்தனமாக நடந்தது என்று சொல்லி விடலாம். ஆனால் அவரின் பின்னங்காலே கிரீசுக்கு வெகு அருகில் இருந்தது. முன்னங்காலோ கிரீசுக்கு வெளியே வெகு தொலைவில். இத்தனைக்கும் அவர் வேகப்பந்து வீச்சாளர் அல்ல. வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி ஒருவரின் தனி நபர் சாதனையை தடுக்கும் வகையில் செயல்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. 


இது குறித்து சேவாக் கூறும்போது, "அது வேண்டும் என்றே வீசப்பட்ட நோ பால். யாருக்குமே எதிர் அணியில் ஒருவர் சதம் அடிப்பது பிடிக்காது. ஆகவே இது நடப்பது இயல்புதான்." என்றார். சங்கக்காரா, "எனக்கு எதுவுமே தெரியாது." என்று சொல்லி விட்டார். ஆக பழி மொத்தமும் ரந்திவ் தலையில். சரிதான் சங்கக்காரா அளவுக்கு ரந்திவுக்கு நடிக்க தெரியவில்லை. அவர் எப்படி அந்த பந்தை தவற விடுவது போல பந்தை பவுண்டரி போக விட்டாரோ அதே போல கொஞ்சம் இயல்பாக இருந்திருந்தால் இந்த நோ பாலும் இந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பி இருக்காது. மறுநாள் ரணதுங்கா போனில் அழைத்து தனது வீரரின் செயலுக்கு மன்னிப்பு கோரிஉள்ளார்.


சட்டம் தன் கடமையை செய்யும்...


சில நாட்களுக்கு முன்னால் சன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கண்டு துணுக்குற்றேன். அதாவது சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தன் பெற்றோர் சாவுக்கு காரணமாக இருந்த ஒரு சாமியாரை கருத்தில் கொண்டு, நாட்டில் பல இடங்களில் உள்ள ஆண் சாமியார்களுக்கெல்லாம் இலவசமாக வாகனம் வாங்கி தருவதாகவும், இன்சூரன்ஸ் மற்றும் சில செலவுகளுக்கு மட்டும் பணம் அனுப்புமாறும் செய்தி அனுப்பி பல லட்சம் ரூபாய்களை அபேஸ் செய்துள்ளார். மேலும் தான் அபேஸ் செய்த பணத்தைக்கொண்டு, சில பல நல்ல காரியங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஒரு விதவையை மணமுடித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி ஓடிக்கொண்டிருந்தது. "ஆகா! என்னடா சங்கர் படக்கதையை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறதே!!" என்று ஆச்சர்யப்பட்டேன். இரண்டு நாள் கழித்து நாளிதழில் இது குறித்த செய்து வெளியானபோது, சாமியார்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், பல நபர்களை வேலைவாங்கி தருவதாகக்கூறியும் ஏமாற்றியுள்ளார் என்றும் வந்திருந்தது. எனக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்தது. 


எங்கே இப்படியே விட்டால் இந்த பிரகாஷ் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி விடுவாரோ என்ற பயத்தில் சட்டம் தன் கடமையை செய்துவிட்டதோ? என்று. ஏனென்றால் சட்டம் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அதிமுக ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் ஒரு வாய்த்தகராறில் அதிமுக அரசை திட்டிவிட, உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சரியாக இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவர்மீது இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது அவர் ஒரேநாளில் அத்தனை குற்றம் செய்தாரா? இல்லை அதுவரை தூங்கிகொண்டிருந்த சட்டம் திடீரென விழித்துக்கொண்டு, தன் கடமையை செய்ததா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

August 16, 2010

யார் இந்த பாலா?

இந்த பதிவுலகத்துக்கு வந்து நான் எழுதும் முதல் தொடர்பதிவு இது. என்னை மதித்து அழைத்த மதுமிதா அவர்களுக்கு நன்றி. அவரை நான் பின்தொடர்வது கிடையாது. பின்னூட்டம் இடுவது கிடையாது. ஆனால் அவரது பதிவுகளை தவறாமல் படிப்பேன். அவ்வளவுதான். ஆனால் என்னை கண்டுபிடித்து தொடர்பதிவு எழுத அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பாலா


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான் ஆனால் முழுப்பெயர் பாலசுப்பிரமணியன். சுருக்கமாக எல்லோரும் அழைப்பது பாலா. அதையே என் வலைப்பதிவுக்கும் வைத்துவிட்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

வலைப்பதிவு தமிழில் இருப்பது எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால்தான் தெரியும். எனக்கு மனதில் தோன்றும் விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதுமே தோன்றும். சுருக்கமாக சொன்னால் ஓட்டைவாய். அதற்கு வழிவகுத்து கொடுத்தது பதிவுலகம். முதன்முதலில் படித்தது உண்மைத்தமிழன். பிறகு ஹாலிவுட்பாலா, கேபிள்சங்கர் என்று பட்டியல் நீண்டு விட்டது. எழுதுவதற்கு முன் ஆறுமாதம் நிறைய பதிவுகளை படிக்க மட்டுமே செய்தேன். பின் என் எழுதும் எண்ணத்தை நிறைவேற்றினேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் என் வலைப்பதிவு பிரபலமாக ஒன்றுமே செய்யவில்லை. தமிழிஷில் இணைத்ததை தவிர. பல பதிவுகளை படித்திருக்கிறேன். அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. என் கருத்துடன் முரண்பட்டால் மட்டும் என் கருத்தை பின்னூட்டமாக இடுவேன்.தோனி சொல்ல மறந்த கதை என்ற பதிவு மிக பிரபலம் அடைந்தது. இதில் காமெடி என்னவென்றால் அதனை காபி செய்து பல பேர் தன பதிவில் போட்டு கொண்டார்கள்.நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அது எனக்கும் வந்தது. மற்றபடி ஒன்றும் செய்ததில்லை. அப்பப்ப அஜித் விஜய் என்று எழுதி நிறைய ஓட்டு வாங்கியதுண்டு.  ஆமா என் வலைப்பதிவு எப்ப பிரபலம் ஆச்சு?


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எனக்கு கற்பனையும் கிடையாது, தட்டிவிட குதிரையும் கிடையாது. நான் எழுதிய எல்லாமே என் சொந்த கருத்துக்கள். அவற்றை சொல்லும்போது என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் சொல்லி இருக்கிறேன். விளைவு பெரிதாக எதுவும் இல்லை. ஒருவேளை நான் சொல்வது எதார்த்தமாக இருப்பதாலோ என்னவோ?


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுமே இல்லை. எனக்கு பொழுதுபோக்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதே போல பணம் சம்பாதிக்கவும் நிறைய வழிகள் இருக்கின்றன. பதிவு எழுதுவது ஒரு மனநிறைவு, அவ்வளவுதான்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

முதலில் அவசரப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு பதிவு தொடங்கினேன். பின் அதை கண்டுகொள்ளவே இல்லை. தற்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் என்பது நம் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கும் அனைவரிடமும் வரும். உதாரணமாக கார்க்கி தலயை கிண்டல் பண்ணும்போதெல்லாம் வரும், கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை திட்டும் போதெல்லாம் வரும். ஆனால் வன்மம் யார் மீதும் வந்ததில்லை. பதிவுலகம் என்றில்லை பொதுவாகவே அப்படித்தான்.

பொறாமை நிறைய பேரிடம் இருக்கிறது. ஹாலிவுட் பாலா, பட்டாப்பட்டி, நீ கேளேன் ஜெட்லி ஆகியோரின் பதிவை படிக்கும்போது அவர்களின் ஸ்டைல், நக்கல் கலந்த பதில் கண்டு பொறாமை வரும். அவர்களைப்போல் நாமும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பின்னூட்டம் Moulefrite என்பவர் இட்டது. தொடர்பு கொண்டது, பாராட்டியது, பாலோயர் ஆனது எல்லாமே ராஜாதான்

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் பதிவுகளின் வாயிலாக.


இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்

ராஜாவின் பார்வை - ராஜா
எப்பூடி - ஜீவதர்ஷன்
Phantom மோகன்
அக்கம்பக்கம் - அமுதா கிருஷ்ணா


முழுவதும் படிக்க >>

August 11, 2010

எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்?


எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்? என்று நம் மக்கள் நாயகன் அவர்களிடம் கேட்டபோது, "இதோ பாருங்க, இந்த வயித்தெரிச்சல் பிடிச்ச பசங்க இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களை எல்லாம் வரிசையா நிக்க வச்சு, 


...
...
...
...
...
...
...
...
...
...
...

நம்ம ஸ்டைல்ல ஒன்னு கொடுக்கணும்!!"   என்று கூறினார். 
இது எப்படி இருக்கு?
படத்துக்கு நன்றி: ஆயிரத்தில் ஒருவன்

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...