விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 6, 2010

தங்கமகன் விருது...



மதுமிதா அவர்கள் பரந்த மனப்பான்மையோடு எனக்கு ஒரு விருது கொடுத்தார். அதன் கனத்தை என்னால் ஒரு நாள் கூட தாங்க முடியவில்லை. ஆகவே அதை பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன். இதை எத்தனை பேருக்கு கொடுக்கலாம் என்று எனக்கு தெரியவில்லை. நானாக கணக்கிட்டு ஒரு நான்கு பேரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். இவ்விருதை பெறுவதன் மூலம் விருதுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.


எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியவர், என் முதல் பாலோயர் (என்ற பெயரில் வழி நடத்துபவர்). என் எழுத்துக்களுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் வழங்கி என்னை செப்பனிட்டவர். காதல் மன்னன். காதல் கதை எழுதுவதிலும் மன்னன். இந்த விருதை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.


நான் அதிகம் படிக்கும் ஒரு பதிவு. என் எழுத்து நடையை மேம்படுத்த உதவி புரிந்த ஒரு தளம். தரும் செய்திகள் முதன்மையானதாகவும் உண்மையானதாகவும் இருப்பதே இதன் சிறப்பு. எனக்கும் இவருக்கும் பெரும்பான்மையான கருத்துக்கள் ஒத்துப்போகின்றன என்பதே வெகு நாட்களுக்கு பிறகு நான் அறிந்தது.  உங்களுக்கு விருது வழங்கி மகிழ்கிறேன்.



இவர்கள் மொக்கை பட விமர்சன ஸ்பெசலிஸ்டுகள். சீரியசான விஷயத்தை எப்படி காமெடியாக சொல்வது? காமெடியான விஷயத்தை எப்படி சீரியசாக சொல்வது என்பதை எனக்கு கற்று கொடுத்த நண்பர்கள். உங்கள் இருவருக்கும் சேர்த்து இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



நான் அடிக்கடி கருத்தோடு மோதிக்கொள்ளும் ஒரு நண்பர். இருவரும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும் பயணிப்பது ஒரே சாலையில் ஆனால் தனித்தனி தடங்களில்.தொடங்கியது ஒரே இடத்தில் இருந்து. ஆனால் போகப்போக தடம் மாறி விட்டது.  என்னை அதிகம் சிந்திக்க வைத்தவர்.  இதையும் சொத்துடைமை என்று மறுத்து விடாதீர்கள். இது ஒரு அன்பின் வெளிப்பாடு. உங்களுக்கு இந்த விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி

6 comments:

பாலா said...

சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் இந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது...

Anonymous said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......
என்னை மிகவும் கவர்ந்தவர் ராஜாவின் பார்வை - கிங் ராஜா
இவரின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தது ......
வாழ்த்துக்கள் அருப்புக்கோட்டை சிங்கம் ......

i appreciate U bala for sharing ur awards with ur motivator
keep it up...

சந்திக்கும் நாளை சந்திக்கும் வரை உங்களயும் பற்றி சிந்திக்கும்

enrum natpudan
thiru

ஜெட்லி... said...

நன்றி அண்ணே....

வெண்ணிற இரவுகள்....! said...

வாங்க வேண்டாம் என்று தான் நினைத்தேன் உங்கள் அன்பிற்காக வாங்குகிறேன்

"ராஜா" said...

தல விருது வழங்கும் விழா எங்க நடக்க போவுது .... நமிதா டான்செல்லாம் இருக்குல ...

விருதுக்கு நன்றி தல ..

//அருப்புக்கோட்டை சிங்கம்

சிங்கம்மா எங்க??
டேய் ராஜா .. வலைய விரிக்கிறாங்கே... ஏமாந்துராத ..

எப்பூடி.. said...

நான்தான் கடைசியாக வந்துள்ளேன் என நினைக்கிறேன், தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை, மிக்க மகிழ்ச்சி, உங்கள் விருதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் எண்ணங்களும் என் எண்ணங்களும் ஒருமித்து இருப்பதாக நீங்கள் கூறியதற்கு நன்றி, மீண்டும் உங்கள் நட்புக்கு நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...