கடுப்பை கிளப்பிய சன்டிவி
பொதுவாகவே இந்த மாதிரி நட்சத்திர கலைவிழா, பாராட்டு விழா எல்லாம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாகி விட்டது. அவருக்குத்தான் இவை அலுக்காது. நமக்குமா? ரஜினியின் மேடை பேட்டி, பாரதிராஜா- இளையராஜா பேச்சுக்கள் என்று சில சுவாரசியமான விஷயங்கள் காட்டியதால் பார்த்தேன். மேடையில் ஆடிய இளம் நடிகைகளை நாம் கண்கள் மேய்வதை அப்படியே காமிரா செய்து காட்டியது. அதிலும் ஆப்பக்காரி பாடல் உச்சகட்டம். போதாததுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள் வேறு. நம்மூரில் சின்ன குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவார்களே அதே போல ரஜினி பாலச்சந்தர் பேட்டியை காட்டி காட்டியே முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விட்டார்கள். கடைசியில் அதை காட்டவே இல்லை. வாயில் கெட்ட வார்த்தை வந்தது. வீட்டில் எல்லோரும் இருந்ததால் வாயை பொத்திக்கொண்டேன்.
புன்னகை மன்னன் விஜய்
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் விழா முழுவதும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தவர் நாம் இளைய தளபதிதான். அநேகமாக அவருக்கு "இளைய நரசிம்மராவ்" என்று பெயர் வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். மருந்துக்கு கூட அவர் முகத்தில் புன்னகை இல்லை. என்னதான் பல சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி வலுக்கட்டாயமாக உம்மனாம் மூஞ்சியாகவா இருப்பது? என் அம்மவே, "சிரிப்பா. சிரிச்சா என்ன வாயில இருந்து முத்தா உதிர்ந்திரும்?" என்று கூறினார். அவர் அஜித் ரசிகை அல்ல. எம்ஜிஆர் ரசிகை.
உலகக்கோப்பையும் இந்திய அணியும்
சச்சின் முதல் சதம் அடிப்பதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் பார்த்து வருகிறேன். தென்ஆப்பிரிக்க அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி இருப்பது போல, இந்திய அணிக்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு ராசி உண்டு. அதாவது உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் மூன்றாண்டுகள் எல்லா சாதனைகளையும் முறியடித்து, முதலிடத்தில் இருக்கும். சரியாக உலகக்கோப்பை தொடங்கும் நேரத்தில் சச்சினை தவிர்த்து எல்லா வீரர்களும் பார்மை இழப்பார்கள். சின்ன அணிகளிடம் கூட மரண அடி வாங்குவார்கள். இது மறுபடியும் நடந்து விடுமோ? என்று என் மனதில் லைட்டா ஒரு டவுட் வந்திருக்கு. கம்பீர், ரெய்னா, தோனி உள்பட பலர் மெதுவாக பார்மை இழந்து வருகிறார்கள். தென்னாபிரிக்கா தொடரில் தங்களுடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்க போகிறதோ? அதே போல பாகிஸ்தான், மற்றும் நியூஸீலாந்து அணிகள் உலகக்கோப்பை வரை சொங்கி ஆட்டம் ஆடுவார்கள். ஆனால் உலகக்கோப்பையில் அநியாயத்துக்கு ஆக்ரோஷமாக ஆடி, முக்கிய அணிகளை வெளியேற்றி விட்டு தானும் வெளியேறி விடுவார்கள். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது.
ஒரு சின்ன டவுட். ஸ்ரீசாந்த், நெஹ்ராவை விட இர்பான் பதான், மற்றும் ஆர் பி சிங் இருவரும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்கள் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறார்கள்? தோனி கங்குலியை பார்த்து பாடம் படிக்க வேண்டும். இல்லையேல் முற்பகல் செய்தால் பிற்பகல் தனக்கே விளைந்து விடும்.
கன்றாவி தலைப்புகள்...
வர வர பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் தினத்தந்தி தலைப்பு செய்தி மாதிரி ஆகி விட்டது. கடந்த வாரம் ஒரு தலைப்பு, "ஆடையில்லாமல் தவித்த ஐஸ்வர்யா" இதை படித்தவுடன் எல்லோரும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு படிக்க வருவார்கள் என்ற நம்பிக்கை. அதே போல இன்று "அஸினுக்கும் சல்மானுக்கும் இடையே ரகசிய திருமணம்", "என் கணவன்? சதா" என்று கன்றாவியான தலைப்புகள் தென்படுகின்றன. ஹிட்டுகள் வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது பாருங்கள். காலக்கொடுமை...
அதிமேதாவி கமல்...
மன்மதன் அம்பு முதல் காட்சியே பார்த்தாகி விட்டது. படத்தை பற்றி கருத்து ஒன்றும் தெரிவிக்க விரும்பவில்லை. அப்புறம் ஏதாவது சொல்லி, "இதோ வந்துட்டாண்டா ரஜினி ரசிகன்!!" என்று காரி தூப்பி விடுவார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விஜய்யை வேண்டும் என்றே கலாய்த்தார்கள் என்று கிளப்பி விட்ட மாதிரி ஒரு பற்ற வைக்கும் வேலையை மட்டும் செய்யபோகிறேன்.
இந்து கடவுள்களை இழிவு படுத்துகிறார் என்று கோஷமிட்டவர்கள் படத்தில் இந்துக்களைப்பற்றி மகா மட்டமான ஒரு வசனம் வருகிறது கவனித்தார்களா என்று தெரியவில்லை. மாதவன் கமலிடம், "அதென்ன சார் எல்லா கள்ள காதலன்களும் காவி சட்டையே போடுறாங்க?" என்று கேட்பார். அதற்கு கமல்," ஒரு வேலை religion காரணமா இருக்கலாம்." என்பார். அதாவது இந்துக்கள் எல்லாரும் கள்ள உறவு வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம் வருகிறது.
படத்தில் மாதவன் "தமிழை விடுங்க, தமிழ் மெல்ல சாகட்டும்" என்று சொல்வார்.
அதே போல ஒரு காட்சியில் திரிஷா, "நான் பொறுத்துக்குவேன் , தமிழ் பொறுக்குமா?" என்று கேட்க, அதற்கு கமல்' "தமிழ் எப்பவுமே தெரு பொறுக்கும், இதையும் பொறுக்கும்." என்பார். அதென்ன கமல் படத்தில் எல்லாம் இலங்கை தமிழர்களை அம்மாஞ்சியாகவே சித்தரிக்கிறார். இவை அனைத்தும் படத்தில் அவ்வளவு அத்தியாவசியமும் இல்லை. நடிகைகளையும் அவ்வப்போது கேவலப்படுத்தி சேம் சைடு கோல் போடுகிறார். என்ன கமல் சார் இப்படி பண்ணலாமா?
எப்படி தீயே வேலை செஞ்சேன் பாத்தீங்களா? ஏதோ நம்மாள முடிஞ்சது.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>