விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 28, 2012

வெட்டி அரட்டை - ஏதோ சொல்லணும்னு தோனிச்சு....



பதிவு எழுத வந்து மூன்றாவது ஆண்டு முடியப்போகிற தருவாயில் மற்றுமொரு மைல்கல்லை தொட்டிருக்கிறேன். மூன்றாண்டுகளில் இரண்டு லட்சம் பார்வையாளர்கள் என்பது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் முன்னேறிக்கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதற்கு துணைபுரிந்த அனைத்து இணைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

முகு: அணில் ரசிகர்கள் இந்த தளத்தை எந்த காரணத்துக்காக படிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். ஆகவே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஒரு பத்தி இருக்கிறது. தயவுசெய்து படிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?

ஏன் இந்த பாரபட்சம் 


இந்த கேள்வியை ஆயிரம் தடவை கேட்டுவிட்டார்கள். நானும் என் பங்குக்கு கேட்கிறேன். சென்னையில் மட்டும் ஏன் மின் வெட்டு நேரம் குறைவாக இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சென்னையில் இருந்து வழக்கமாக தீபாவளி அன்று சொந்த ஊருக்கு வரும் நண்பன் இந்த முறை வரவில்லை. அதே போல வந்தவர்கள் எல்லோரும் ஒரே நாளில் திரும்பி விட்டார்கள். காரணம் 'அவங்க ஊரில்' மின்வெட்டு கிடையாதாம். இந்த ஊரில் கரண்ட் இல்லாமல் கொஞ்ச நேரம் கூட அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம். தமிழகத்தின் பிற நகரங்களில் ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்‌எல்‌ஏக்கள் இருக்கும் ஏரியாக்களில் மட்டும் மின்வெட்டு கிடையாதாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் மனிதர்கள். நாமெல்லாம் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் போல, ஒட்டுக்காக வளர்க்கப்படும் பிராணிகள்தானே?


இதை விட கொடுமை காற்றாலைகளால் மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்த தனியார்களுக்கு உரிய தொகையை கொடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கிறது. இதனால், மேலும் உற்பத்தி செய்யவோ, காற்றாலைகளை அமைக்கவோ தயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டும் மாநில அரசு இந்த விஷயத்தில் யாரை குற்றம் சாட்டப்போகிறது? "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது", என்று ஒரு காலத்தில் அரசியல் செய்தார்கள். இன்னும் சில காலங்களில் "வட தமிழகம் ஒளிர்கிறது, பிற தமிழகம் இருள்கிறது", என்று அரசியல் முழக்கங்கள் கேட்கலாம். அதே போல  ரேஷன் முறைப்படி குடும்பத்துக்கு இத்தனை யூனிட் கரண்ட் என்ற முறை விரைவில் வரும். இல்லாவிட்டால், மின் விநியோகத்தில் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு எல்லாம் வரலாம். தற்போது தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம் கெஞ்சுவது போல இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கரண்ட் விடுமாறு சென்னை மக்களிடம் கெஞ்சும் காலம் வரும்.  இவை எல்லாம் கற்பனை என்றாலும் நடக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒன்று மட்டும் நிச்சயம். இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த பிற தமிழக மக்களின் தொழில்கள் முடங்கி, பஞ்சம் பிழைப்பதற்காக எல்லோரும் சென்னை நோக்கி படையெடுப்பார்கள். ஏதோ சொல்லணும்னு தோனிச்சு......

ஒபோடெவும், இடி அமினும்


உகாண்டா என்ற பெயரைக்கேட்டவுடன் நினைவுக்கு வருவது இடி அமின் தாதா என்ற மனிதர்தான். விடுதலை அடைந்த முதல் பத்து வருடத்துக்கு ஒபோடே கையில் சிக்கி குற்றுயிரும் குறையுயிறுமாய் இருந்த உகாண்டா, அடுத்த எட்டுவருடத்தில் இடி அமின் கையில் சிக்கி மீண்டு வரவே முடியாத அளவிற்கு சமாதி கட்டப்பட்டது. இவர்கள் இருவரும் கூட்டாளிகளே. ஒபோடே அதிபராக இருந்த காலத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் இடிஅமின். பின் இருவருக்கும் முட்டிக்கொள்ளவே, ஒபோடெவை ஒழித்துக்கட்டி ஆட்சியை பிடித்தார், ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத இடிஅமின். எட்டே ஆண்டுகள்தான். மக்களை, நாட்டின் இயற்கை வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டினார். நாட்டின் முக்கிய பொறுப்புகளில் எல்லாம் அவரது இனத்தை சேர்ந்த அடியாட்களையே அமர்த்தினார். அவர்களை அடியாட்கள் என்று சொல்லக்காரணம், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், வரும் பணத்தை எல்லாம் கொள்ளை அடிப்பதிலேய குறியாக இருந்தவர்கள். தட்டிக்கேட்பவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். எல்லா கொள்ளையிலும் ஒரு பெரும்பங்கு இடிஅமினுக்கு உண்டு. 


இப்படியே சென்றால் எத்தனை நாளைக்குத்தான் அந்த நிறுவனம் நடக்கும்? இப்படி ஒன்றிரண்டு வருடங்களிலேயே திவாலான நிறுவனங்கள் ஏராளம். சரி பணத்துக்கு என்ன செய்வது? எனவே இடிஅமின் அடுத்ததாக உகாண்டாவின் பொருளாதாரத்துக்கு பெரும் உதவி செய்து வந்த ஆசியர்களின் (பெரும்பான்மையான இந்தியர்கள்) வணிக நிறுவனங்களை கைப்பற்றினார். துரத்தி அடிக்கப்பட்ட ஆசியர்கள் அகதிகளாக உலகெங்கும் தஞ்சம் புகுந்தார்கள். வளம் கொழித்த அந்த நிறுவனங்களும் விரைவில் திவாலாகின. தொழில் நடந்தால்தானே லாபம் வரும்? லாபம் எல்லாம் வகை தொகை இல்லாமல் கொள்ளை அடிக்கப்பட்டால்?  நாடே பசி பட்டினியில் வாடியது. இதைப்பற்றி எல்லாம் இடிஅமின் கவலைப்படவே இல்லை. விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவிக்கும் பயிர்களை ஏற்றுமதி செய்து கிடைத்த பணத்தில், கோடிக்கணக்கில் விஸ்கியும் டிரான்சிஸ்டரும் இறக்குமதி செய்து, இலவசமாக ராணுவ வீரர்களுக்கு சப்ளை செய்தார்.
   

மக்கள் அனைவரும் பசியில் செத்துக்கொண்டிருக்க, ஹாய்யாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். மொத்தத்தில் ஒரு ஒட்டுமொத்த தேசத்தையே ஒரு சிறு கொள்ளைக்கூட்டம் சூறையாடி,இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொண்டது. கொள்ளைக் கூட்டத்தலைவன் இடிஅமீன். கடைசி வரை அவர் மக்களிடம், "எல்லாம் உங்கள் நலனுக்குத்தான்.", என்றே சொல்லி வந்தார். அதையும் அவர்கள் நம்பினார்கள். நம்பித்தானே ஆகவேண்டும். வேறு வழி? அவர்களுக்கு இடிஅமினை தவிர வேறு யாரையும் தெரியாதே? உலகமே இதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவ்வளவு கொடுமைகளை செய்த இடிஅமீன், ஹிட்லர் போல தற்கொலை செய்து கொண்டோ, முசோலினி போல தலைகீழாக தொங்கவிடப்பட்டோ, கேவலமாக இறக்கவில்லை. சவுதி அரேபியாவில் தன் முதுமையை ஜாலியாக கழித்து இயற்கயாகவே இறந்தார். 

ஒரு இடிஅமின் கையில் சிக்கியதற்கே ஒரு நாடு இப்படி ஆனதென்றால்....சரி விடுங்க ஏதோ சொல்லணும்னு தோனிச்சு...... 

பிஞ்ச செருப்பும் பிய்யாத செருப்பும். 


பதிவுலகில் எனக்கு சமீபத்தில் கிடைத்த ஒரு பட்டம் 'பிஞ்ச செருப்பு'. (புது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்துக்கு இந்த பெயரை வைக்க விரும்பினால் என்னை அணுகவும்) தமிழகத்தின் தற்கால டாக்டர், எதிர்கால முதல்வர், மாஸ் ஹீரோ, வசூல் நாயகன் ஒருவரின் வளர்ச்சி கண்டு வயிற்றெரிச்சல் தாளாமல் அவரை கலாய்ப்பதற்காகவே நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருவதால், உச்ச கட்ட கோபத்துக்கு உள்ளான டாக்டர் அபிமானி ஒருவர் இந்த பட்டத்தை கொடுத்திருக்கிறார். அவர் வெளிப்படையாக என் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதால் அவரது தளத்தில் கருத்துரை இடுவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவேதான் இங்கே கூறுகிறேன்.  ஒரு படத்தின் வெற்றியை பற்றியோ, அல்லது வசூல் பற்றியோ அதை வெளியிடும் இணையதளத்தின் நம்பகத்தன்மை பற்றியோ நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இவற்றால் எனக்கு பைசா பிரயோசனம் கிடையாது. 


அவரது படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் எனக்கென்ன? நான் கலாய்ப்பதை நிறுத்தமாட்டேன். நான்தான், "எதையோ மிதித்து கொண்டு பதிவெழுதும் பிஞ்ச செருப்பு" என்று, "எதையுமே மிதிக்காத" அந்த பிய்யாத செருப்புக்கு தெரிகிறதல்லவா? அப்புறம் என்னத்துக்கு திரும்ப திரும்ப என் செருப்பை வந்து முகர்ந்து பார்த்து, "அய்யோய்யோ இவன் எதையோ மிதித்து விட்டான்!!!", என்று புலம்புகிறார்? கடைசியாக அந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம்தான் சென்றேன். அங்கேதான் எதையோ மிதித்து விட்டேன் போலிருக்கிறது.  பொதுவாக எங்கள் நண்பர் குழுவில் ஒரு கருத்து உண்டு. "மனப்பக்குவம் இல்லாத சிறுவர்களே அவருக்கு ரசிகராக இருப்பார்கள்." என்று என் நண்பர்கள் கூறுவார்கள். "நான் அப்படி எல்லாம் இல்லை." என்று சொல்லுவேன். ஆனால் என் கூற்று சில நேரங்களில் தவறாகி விடுவதுண்டு என்று இப்போது புரிகிறது.

பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவல் ஒன்று 


சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம், வசூலில் அவரது முந்தையை சாதனைகளை முறியடித்திருக்கிறதாம். அதே போல மங்காத்தா, பில்லா படங்களில் வசூல்களை அனாயாசமாக முந்தி எந்திரனை வீழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பல இணையதளங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

ஏதோ சொல்லணும்னு தோனிச்சு..... 

உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க..... 

முழுவதும் படிக்க >>

November 21, 2012

வெட்டி அரட்டை பில்லா vs துப்பாக்கி, விமர்சனம்

வணக்கம் நண்பர்களே..... 

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். முதலில் என் திருமணத்திற்கு பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம்மை வாழ்த்துவதற்கு உலகம் முழுவதும் இத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்காரணமும் இணையமும், பதிவுலகமும்தான். மிக்க நன்றி.... 

விமர்சனம்

கொஞ்ச நாளைக்கு முன்னால் ரிலீஸ் ஆன ஒரு படத்தை பற்றி என் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். விமர்சனம் என்று தலைப்பு வைத்து விட்டாலும் இவை என் சொந்த கருத்துக்களே. படித்து விட்டு, படம் வந்து இத்தனை நாள் கழித்து இது தேவையா? என்று காண்டானால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

கதாநாயகன் ராணுவத்தில் பணிபுரிபவர். விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். அங்கே குழப்பம் விளைவிக்கும் தீவிரவாதிகளை எப்படி தீர்த்துக்கட்டுகிறார் என்பதை அதிரடி திருப்பங்களுடனும், சண்டை காட்சிகளுடனும் கூறி இருக்கிறார்கள். இப்படி மூன்றே வரிகளில் கதையை சொல்லிவிட்டாலும் அதை எப்படி திரைக்கதைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதிலேயே இயக்குனரின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நாயகன் தன் வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நடித்திருக்கிறார். அதிலும் தன்னுடைய வழக்கமான ஸ்டைலை கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். "ராணுவ உடை இவருக்கு பொருந்துமா?", என்று பலருக்கு சந்தேகம் உண்டு. ஆனால் கச்சிதமாக பொருந்துகிறது. ஏன் எல்லா மிலிட்டரிகாரர்களும் சொல்லி வைத்தார் போல புல்லட் வண்டி ஓடுகிறார்கள்? என்று தெரியவில்லை.  

இவருக்கு கைவந்த கலையான சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அதிலும் இறுதியில் வில்லனும் இவரும் மோதும் காட்சிகள் அனல் பறக்கின்றன. நிறைய இடங்களில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்திருக்கிறார். 

படத்தின் இன்னொரு பலம் வில்லன். சமீப காலமாக கதாநாயகனை விட வில்லன்கள் அழகாக இருக்கிறார்கள். அதே போல கதாநாயகனை விட வில்லன்கள் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள். என்னதான் வில்லன் அறிவாளியாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனோடு ஒண்டிக்கு ஒண்டி மோதி இறப்பது தமிழ் சினிமாவின் மரபு. வில்லன் இறக்கும் காட்சி நம்ப முடியாததாக இருக்கிறது. படத்தில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. குறிப்பாக கதாநாயகனை மடக்குவதற்கு அவன் தங்கையையே பயன்படுத்துவது, அதையே வில்லனை மடக்குவதற்கு கதாநாயகன் பயன்படுத்தி கொள்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். "தீவிரவாதிகள் என்பவர்கள் வேற்று கிரகத்தில் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருப்பவர்கள்." என்று இயக்குனர் நாம் வயிற்றில் புளியை கரைக்கிறார். வில்லனுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் அந்த ஊரில் வசிக்கும் சாதாரண மக்களாகவே இருப்பதும் அதிர்ச்சி தரும் திருப்பங்கள். "அவர்கள் சமூகத்தின் மீது கோபம் கொண்டவர்கள்.", என்று சொன்னவர்கள் எதற்காக கோபம் கொண்டவர்கள் என்றும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை கிளைமாக்ஸும், இடைவேளைக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும். வில்லன் இடத்துக்கே சென்று அவன் ஆட்களை அடித்து நொறுக்கும் காட்சியில் நாயகன் சிக்சர் அடிக்கிறார்.

படத்தின் பெரிய மைனசே கதாநாயகியும் அவர் வரும் காதல் காட்சியும்தான். கதாநாயகி அடாவடிப்பெண் என்பதை நிரூபிப்பதற்காகவே மெனக்கெட்டு மொக்கையான காட்சிகளை திணித்திருக்கிறார் இயக்குனர். மிக அழகான நடிகையான  இவரை இவ்வளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டி இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. காஸ்டியும் டிசைனருக்கு வேலையே இல்லை போல. அதே போல மேக்கப்மேனும் தூங்கிக்கொண்டே வேலை பார்த்திருக்கிறார். நல்ல காமெடி நடிகர் இருந்தும்  காமெடி சுத்தமாக எடுபடவில்லை.படத்தின் நீளம் கருதி காமெடி காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒன்றிரண்டு காமெடி காட்சிகளுமே கதாநாயகி வரும் காட்சிகள்தான். அவையும் சகிக்கவில்லை. என்ன ஆயிற்று இசையமைப்பாளருக்கு? பாடல்கள் ஒன்றுகூட எடுபடவில்லை. வெளியில் கேட்பதற்கு சுமாராக இருந்த பாடல்கள் கூட படத்தில் மொக்கையாக இருக்கின்றன. அதே போல பின்னணி இசையும் என்னை கவரவில்லை. படத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக அமைக்கிறேன் பேர்வழி என்று அவசரமாக எடிட் செய்திருக்கிறார்கள். மக்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

படத்தில் நாயகன் பேசும் வசனங்கள் நச்சென்று இருக்கின்றன. தேசப்பற்று, நாட்டைக்காப்பதில் ஒவ்வோரு மனிதனுக்கும் உள்ள பங்கு என்று மெய் சிலிர்க்கும் வசனங்கள் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது, படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் மிகச்சிறந்த ஒரு என்டர்டெயினர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் பெரிய பிரச்சனையை கிளப்புமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை. 

இவரது போட்டி நடிகரான வெள்ளை நடிகரின் படத்தை விட இது வசூல் சாதனை புரிந்துள்ளது என்பதும், வெள்ளை நடிகரின் ரசிகர்களே மறைமுகமாக படத்தை ரசிக்கிறார்கள் என்பதும், எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல் தரும் செய்திகள். என்ன வேணா சொல்லுங்கள் எங்க அண்ணன் மறுபடியும் ஃபார்ம்முக்கு வந்து விட்டார் என்பதை எந்த கொம்பனிடமும் அடித்து கூறுவோம். 

பின்குறிப்பு: கொஞ்ச நாளைக்கு முன்னால் கே டிவியில் ராணுவ வீரன் படம் ஒளிபரப்பினார்கள். அதற்கு விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்று நினைத்ததின் விளைவே இந்த பதிவு. இது ராணுவ வீரன் படத்தை பார்த்தபின் எனக்கு தோன்றியவை. நீங்க இது வேற படத்தோட விமர்சனம்னு நினைச்சீங்களா? அந்த படத்தை பார்த்து நொந்து போனது தனிக்கதை. அதை அப்புறம் சொல்றேன். More Over, அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை....  


அட XXXX..... அப்போ தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு தானே கேக்குறீங்க? 

பில்லா படத்துல தல சொன்னது , "I am Back.....". அதே மாதிரி நானும் பதிவுலகத்துக்கு திரும்பி வந்துட்டேன் அதனால சொல்கிறேன் ...... "I am Back...."

துப்பாக்கி படத்துல டாக்குடர் சொல்ற மாதிரியே, தினமும் காலையில் நான் வேலைக்கு கிளம்பும்போது என் மனைவி என்னிடம் "சீக்கிரம் வந்திடுங்க..... I am Waiting...." அப்படின்னு சொல்றா. போதுமா......... 



அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.... 



முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...