விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 22, 2010

ரஜினி செய்த துரோகம் ... டவுசர் கிழிந்த தமிழன்?


அப்பாடா ஒரு வழியா நம்ம நித்யாவை பிடித்து விட்டார்கள். இமாச்சல் பிரதேஷில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த அவரை எதிர்பாராத விதமாக கைது செய்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? அவர் மீது தினம், தினம் புது புது வழக்குகள் பதிவு செய்யப்படும். தினம் நாளிதழ்களில் அவர் பெயர் இடம் பெரும். சி பி ஐ சோதனை, ஆபாச சீடிக்கள், சரோஜா தேவி புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்று அவரின் ஆசிரமத்தில் இருந்து கண்டெடுக்கப்படும். இப்போதும் இவை எல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்புறம் என்ன? அவர் சிறையில் குப்புற படுத்தார், மல்லாக்க படுத்தார், குறட்டை விட்டார் என்று ஏதாவது செய்தி போடுவார்கள். பின் ஏதாவது பிரச்சனை வந்தால், (கவலைப்படாதீர்கள் காவிரி பிரச்சனை Coming soon..) அதை தூக்கி போட்டு விட்டு, நாம் போராட கொடி பிடிக்க, உச்சுக்கொட்ட போய் விடுவோம். அதற்குள் நம்ம கடமை வீரர்கள் நித்யாவிடம் பேரத்தை முடித்து கொண்டு அவர் மீது உள்ள வழக்குகளை உப்பு சப்பில்லாமல் ஆக்கி விடுவார்கள். இதெல்லாம் நம் கண்ணுக்கு தெரியாது. காவிரி போராட்டத்துக்கு ரஜினி வந்தாரா, அஜித் வந்தாரா, அவர்கள் ஆயா வந்தாரா என்று ஆராய சென்று விடுவோம். 



எனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. திரை உலக நட்சத்திரங்கள் பலரையும் ஐபிஎல் போட்டிகளில் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்னால், திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்திருந்தார். எந்த ஆட்டம் என்று சரியாக ஞாபகம் இல்லை. சரி அவர் எந்த அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? சென்னை அணிக்கு? இல்லை.சரி பெங்களூரு அணிக்கு? இல்லவே இல்லை. மும்பை அணிக்குதான் ஆதரவு அளித்தார். இதில் உள்ள உள் நோக்கம் தெரிகிறதா? ரஜினி அடிப்படையில் மராட்டியர். அதனால்தான் அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தார். தொடங்கட்டும், தூக்கி விட்ட தமிழகத்துக்கு துரோகம் இழைத்த ரஜினிக்கு எதிராக நடிகர் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வரட்டும். எங்கே நம் சத்யராஜ், சீமான் எல்லாம்? உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை? தொடங்குங்கள் உங்கள் வசை பாடுகளை. அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தது தெரிந்தால் கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும். எனவே முதல் வேலையாக இதை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள். கொஞ்ச நாள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்த புண்ணியம் உங்களை சேரும்.



நமது தல தன் வாழ்நாள் லட்சியமான கார் பந்தயங்களில் தன் ஆட்டத்தை தொடங்கி விட்டார். முதலில் சோபிக்க தவறினாலும், முடிவில் 18வது இடத்தை பிடித்து அசத்தினார். தீவிர பயிற்சி, விடா முயற்சி(இது அவருக்கு யாரும் சொல்லிதர வேண்டியதில்லை) இருந்தால் இன்னும் பல உயரங்களை அடையலாம். அவரை பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் நபர்கள், இந்த விஷயத்தில் அவரை பாராட்டா விட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர் இப்போது ஈடுபட்டிருப்பது நடிப்பு அல்ல. நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் தல....அப்படியே எங்களையும் கொஞ்சம் கவனிங்க. வருஷத்துக்கு ஒரு படம் கூட இல்லனா எப்படி?



சில விஷயங்கள் கேட்ட மாத்திரத்திலேயே குபீர் சிரிப்பை வரவழைத்து விடும். அப்படி ஒரு செய்தி சில நாட்களுக்கு முன் கேள்வி பட்டேன். அதாவது தென்னிந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று அழைக்கப்படும் திரு ராம நாராயணன் அவர்கள் குட்டி பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். இது பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறிய வார்த்தைகள் "குட்டி பிசாசு என்ற படம் புதுமையிலும், தொழில் நுட்பத்திலும் அவதார், 2012 ஆகிய படங்களை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது". இதை கேட்டவுடன் ஜேம்ஸ் கேமரூன்(நிஜமான) அவர்கள் இனி தான் திரைப்படங்களை இயக்க போவதில்லை. ராமநாராயணன் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர போகிறேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குட்டி பிசாசு படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது நமக்கும் அதுதான் தோன்றுகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை இயக்க நம்ம ராமநாராயணன் அவர்களால் மட்டுமே முடியும். அவருக்கு கொடுக்க ஆஸ்கர் அவார்டுக்கு மேலே ஏதாவது அவார்ட் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அய்யா ராமநாராயணன் அவர்களே, உங்களுக்குத்தான் கழகத்தின் அமோக ஆதரவினால் எல்லா திரைத்துறை சம்பந்தமான விழாக்களுக்கும் அழைப்பு, பஞ்சாயத்து, தலைவருக்கு பாராட்டு விழா என்று ஏகப்பட்ட வேலை இருக்கிறதே, இதற்கிடையே படம் வேறு இயக்கி ஏன் உங்களையும் மற்றவர்களையும் கொடுமை படுத்துகிறீர்கள்?


தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள், எதிரியாக இருந்தாலும் பரிவு காட்டுபவர்கள், வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்றெல்லாம் நான் சிறுவயதில் இருந்தே படித்து வந்திருக்கிறேன். ஆனால் பிரபாகரனின் தாயார் விஷயத்தில் பதிவர்கள் எல்லாம், தமிழனின் மானத்தை கிழி கிழி என்று கிழித்து ஒவ்வொரு தமிழனின் டவுசரையும் கழற்றி காற்றில் வீசி விட்டார்கள். இப்போது நடுத்தெருவில் நிர்வாணமாக நிற்பதாக உணர்கிறேன். அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறேன். ஆனால் என்னை காப்பாற்ற எங்கள் இன காவலர் இருக்கிறார். அவருக்கு அம்மையார் தமிழகம் வருவதே தெரியாதாம்? அப்புறம் எப்படி அவர் இதற்கு காரணமாக இருக்க முடியும்? அவருக்கு ஐபிஎல், பொன்னர் சங்கர், அடுத்து என்ன பாராட்டு விழா நடத்துவது? எதை இலவசமாக கொடுப்பது? அஞ்சா நெஞ்சனா? தளபதியா? என்று ஆயிரம் வேலைகள் இருக்கிறது. அம்மையார் வருவது மட்டும் தெரிந்திருந்தால், அவரை விமான நிலையத்திலேயே இருக்க வைத்து விட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று டெல்லிக்கு கடிதம் அனுப்பி இருப்பார். இல்லை உடன் பிறப்புகளை விட்டு லட்சம் தந்திகளை அனுப்ப சொல்லி இருப்பார். எப்படியாவது ஒரு மாதத்திற்குள் அனுமதிக்க முடியுமா முடியாதா என்று சொல்லி இருப்பார். அதுவரை அம்மையார் விமான நிலையத்திலேயே இருந்திருக்கலாம். என்ன செய்வது, இது பற்றி ஒரு பயலும் வாயை திறக்கவில்லையே? எங்களை கேட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். கேட்டால் சொல்லி இருப்பாரே எப்படி அம்மையாரை துரத்தி இருக்க வேண்டும், அதற்கு எப்படி சப்பை கட்டு கட்ட வேண்டும் என்று. சரி அவர்கள் எதைத்தான் கேட்டு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் கேட்டு செய்யுங்கள் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்று எழுதி விட்டால் போகிறது. ஒன்று தெரியுமா? பிரதமர் அலுவலகத்தில், தபால் பெட்டி இருக்கும் இடத்தில் ஒரு குப்பை கூடைதான் உள்ளதாம். எல்லாம் நமக்கான ஏற்பாடுதான். பின்னே? தபால் பெட்டியில் இருந்து எடுத்து குப்பை கூடையில் போட நேரமாகுமில்லையா?. அதை குறைக்கவே இந்த ஏற்பாடு.


எது எப்படியோ பதிவு போட தினம் ஏதாவது மொக்கை செய்தி கிடைத்து விடுகிறது 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

3 comments:

ttpian said...

thamizhan!

korr!
korrrrrr!

Yoganathan.N said...

-> முதல் விசயம்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுகின்றது. இதில் என்ன நடக்கின்றது என பொருத்திருந்து பார்ப்போம்...

-> இரண்டாவது விசயம்

உள்கூத்து புரிகிறது. ஹிஹி. என்ன செய்வது, ரஜினி தும்மினால் கூட குற்றம்... 1Btw, சீமான் கூடவா???

-> மூன்றாவது விசயம்

//அவரை பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் நபர்கள், இந்த விஷயத்தில் அவரை பாராட்டா விட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர் இப்போது ஈடுபட்டிருப்பது நடிப்பு அல்ல. நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்//

அதே அதே... என் மனதில் உள்ளவைகளை வார்த்தைகளால் கொட்டி விட்டீர்கள்... நன்றி

-> நான்காவது விசயம்

இவனுகளுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??? அது எப்படி வாய் கூசாம அவ்லோ பெரிய மேடையில் அத்தனை பேருக்கு முன்னால் இப்படி வெட்கமே இல்லாமல் பேச முடிகிறது???

-> ஐந்தாவது விசயம்

யார் மீது குற்றம் என்று ஆராய்ந்து நேரத்தை வீணடிப்பதற்கு பதில், இதனை எப்படி தீர்வு காணலம் என்பதை யோசிக்கலாம் இவர்கள். இதைக் கூட செய்யத் தவறினால், அப்புறம் இவர்களுக்கு எதற்கு பதவி, கட்சி etc etc. சிகிச்சைக்காக வந்த என்பது வயது அம்மையாரை விரட்டி அதன் மூலம் அரசியல் செய்யும் இவர்களுக்கு நல்ல சாவெ வராது...

பாலா said...

@ Yoganathan.N

வருகைக்கு நன்றி யோகநாதன்....

Related Posts Plugin for WordPress, Blogger...