விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 24, 2010

சினிமாவை விட்டு விலகுகிறேன்- அஜித் பேட்டி

அஜித் பற்றி தொடர்ந்து எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கு பதிலாக எழுதுவதற்கு தான் நம்ம புலியூரான் இருக்கிறாரே. ஆனாலும் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான அஜித் பேட்டியின் உண்மையான தமிழாக்கம் (நம் பத்திரிக்கைகள் தமிழாக்கம் செய்கிறேன் என்று அர்த்தத்தையே மாற்றி விட்டன.) 

கே: நீங்கள் பேசியது தூண்டுதலின் பேரிலா? இல்லை உங்கள் சொந்த அனுபவத்தாலா?

அஜித்: நான் பேச வேண்டும் என்று எதையும் தயார் செய்யவில்லை. அப்போது தோன்றியதுதான். அது என் அடி மனதில் இருந்து வந்தது. நான் எதையும் தவறாக பேசவில்லை. உண்மையை தான் பேசினேன். சினிமா இண்டஸ்ட்ரி சிலபேர் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபித்துள்ளன..

கே: நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமுதாயத்தால் உயர்ந்த இடத்துக்கு போகிறார்கள். அப்படியானால் அவர்கள் சமுக பிரச்சனைகளில் முன் நிற்பது அவசியம் தானே? 

அஜித்: ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த கடமை உள்ளது. ஒரே உணவை பலபேர் சேர்ந்து சமைத்து கெடுப்பதுபோலதான் ஒரு சமுக பிரச்சனையும். நான் நம் அரசியல் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். 

கே: நடிகர்களால் ஏன் சுதந்திரமாக கருத்துக்களை பேச முடிவதில்லை? 

அஜித்: ஒரு கூட்டம் நடிகர்கள் பொது பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்று சொல்கிறது , மற்றொரு கூட்டம் இது நடிகர்கள் வேலை இல்லை என்று சொல்கிறது.  இடையில் சிக்கியது நாங்கள்தான். சரி பொது பிரச்சனைகளில் முழுமூச்சுடன் இறங்கினால் அவர்கள் கேவலப்படுத்தபடுகிறார்கள். பின் ஏன் அவர்களிடம் பொது பிரச்சனை பற்றி கேள்வி கேட்க வேண்டும்?  அவன் பிறப்பினம், விசுவாசம் முதலியவற்றை விமர்சிக்க வேண்டும்? ஒரு நடிகன் தனக்கு வாய்ஸ் இருக்கும் பட்சத்தில் பொது பிரச்சனைகளில் முழுமூச்சுடன் இறங்கினால் என்ன தவறு? 

கே: நடிகனின் பிறப்பினம் ஒரு பிரச்சனையா?

அஜித்: ஒருவர் சினிமா அல்லது கிரிக்கெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்கும் பொது தன் அருகில் இருப்பவரின் பிறப்பினம் பற்றி விசாரிப்பதில்லை. அது தான் கலையின் சிறப்பு. நாடு, இனம், மொழி இவற்றை கடந்து மக்களை இணைப்பது கலை. இதனுள் இன பேதத்தை புகுத்துவது கண்டிக்க தக்கது. ரசிகர்களை பாருங்கள், வேறு வேறு இனம், மொழி, பகுதிகள் இருந்தாலும் அவர்கள் சினிமா என்ற ஒன்றால் ஒருங்கிணைந்து உள்ளனர். 

கே: சினிமா பற்றி பேசும்போது, நீங்கள் மனித வெடி குண்டாக, நக்சலைட்டாக நடிப்பீர்களா?

அஜித்: சமீப காலமாக நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு, காமிராவை பார்ப்பேன் என்றே தோன்ற வில்லை. ஒரு நடிகனுக்கு நடிக்க கூட சுதந்திரம் இல்லை. நடிகன் படத்தில் புகைபிடித்தால், ஒரு சந்ததியினரை பாதிக்கும் என்றால், அவன் அரசியலில் சந்ததியினருக்கு நன்மை செய்ய விரும்பினால் கேட்கும் முதல் கேள்வி "இங்கே உனக்கென்ன வேலை?" 

கே: ஆனால் நீங்கள் 50வது படத்துக்கு ஒப்பந்தம் ஆகி உள்ளீர்களே?

அஜித்: ஆம். திரு தயாநிதி அழகிரி அவர்களுக்கு படம் பண்ணுகிறேன் என்பதில் பெருமையே. ஆனால் என் பிறப்பினம் பற்றி பிரச்சனைகள் எழுந்த பிறகு, பேசாமல் போய் கார் ரேசில் ஈடுபட்டு நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்....  இப்படியாக போகிறது அந்த பேட்டி.

பேட்டியை படித்தவுடன் மனதில் இனம்புரியாத சோகம் தொற்றி கொண்டது. அஜித் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் அல்ல. உண்மை பேசினால் கொடுக்க வேண்டிய விலையைப்பார்த்து.... அஜித்தை திரை உலகை விட்டு போகாதீர்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஆனால் சில தரை டிக்கெட்டுகளின் கேவலமான ஸ்டன்ட்களால் அவசரப்பட்டு முடிவெடுத்து, அவர்களை பென்ச் டிக்கெட் ஆக்கி விடாதீர்கள்.

எங்கே எங்கே மனிதன் எங்கே.. 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..

உங்க கருத்துகளை இங்க பதிவு பண்ணுங்க..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...