விமர்சன வித்தகர்கள்
பதிவுலகம் பிரபலமாக தொடங்கியதில் இருந்து, எந்த ஒரு திரைப்படத்தையும் மிக வெளிப்படையாக விமர்சிக்கும் பாங்கு அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு வெளிப்படை என்றால் மிக மிக கேவலமாக திட்டும் அளவுக்கு. இதில் ஒரு வித நேர்மை இருந்தால் கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட வெறுப்பே தெரிகிறது. ஒரு சில நண்பர்கள், தான் ரஃப் அண்ட் டஃப் ஆள் என்றும், ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆட்கள் என்றும் புரிய வைக்க வேண்டும் என்று காட்டுவதற்காக சில கெட்ட வார்த்தைகளையும் அடித்து விடுகிறார்கள். இதை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால் இவை முகம் சுளிக்க வைக்கும் என்பது உண்மை. "கடவுள் இல்லை", என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட "இருந்தா நல்லா இருக்கும்" என்று சொல்வதை ஏற்றுக்கொள்வது, அந்த கருத்து சொல்லப்பட்ட விதத்தாலேயே. விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அதே போல சில பிரபல, நல்ல பதிவர்கள் படத்தின் கதையையே விமர்சனம் என்ற பெயரில் எழுதி விடுவதால், சமீப காலத்தில் வரும் மொக்கை படங்களில் உள்ள ஒரு சில சுவாரசியங்களும் படம் பார்க்கும்போது காணாமல் போய் விடுகிறது. இதனாலேயே இப்போதெல்லாம் எந்த ஒரு விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் நான் படிப்பதே இல்லை,
யூரோ கோப்பை
மேட்ச் பிக்சிங் என்று சொல்கிறார்கள். ஒரு தலைப்பட்ச முடிவுகள் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் சுவாரசியமாகவே உள்ளது. வழக்கம்போல எனது அபிமான ஜெர்மனி அரையிறுதியில் தோல்வியுற்றது. இந்த அணி இறுதி போட்டிக்கு வந்தால் ஸ்பெயினுக்கு சரியான சவாலாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அரையிறுதியில் இத்தாலியின் ஆட்டம் மிக அருமை. சொல்லப்போனால் ஸ்பெயினுக்கு இப்போதுதான் மிக கடினமான தருணம். இரண்டு அணிகளில் இத்தாலி அணியே சிறந்த அணியாக இருக்கிறது. பார்க்கலாம். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்களை பார்த்த போது அய்யோ பாவம் என்றே தோன்றியது. அப்புறம் ஆட்டம் தொடங்கும் முன் இரண்டு அணிகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்படும் நேரத்தில், ஒவ்வொரு வீரருடனும் ஒரு குழந்தை கை கோர்த்து வருகிறது. எங்கிருந்து புடிக்கிறீங்கப்பா?" என்ன அழகு....ச்சோ சுவீட்!!" என்று சொல்லத்தோன்றுகிறது.
மாட்டிக்கொண்டாள் மணிமேகலை
தொடர்ந்து பதிவுலகில் பல்வேறு பதிவுகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இந்நேரம் என்ன நினைத்துக்கொண்டு இந்த பத்தியை படிக்க தொடங்குவீர்கள் என்று எனக்கு தெரியும். அதுதான் இல்லை. இப்போது நான் சொல்லப்போவது அது அல்ல. மணிமேகலை என்ற பெண்ணை பற்றியும் அல்ல. சும்மா ரைமீங்காக வைத்த தலைப்பு அவ்வளவே.
"பெண்கள் பெரும்பாலும் தாங்கள் சைட் அடிக்கப்படுவதை விரும்புவார்கள். அதேபோல அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஆண்களை சைட் அடிப்பதிலும் கில்லாடிகள். அவர்கள் சைட் அடிக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்கவே முடியாது." இந்த அரிய தத்துவத்தை சொன்னவன், பள்ளிப்பருவத்திலேயே பல பெண்களை சைட் அடித்தும், பெண்களால் சைட் அடிக்கப்பட்டேன் என்று சொல்லிக்கொண்டும் திரிந்த அருமை நண்பன் ஒருவன். அன்றில் இருந்து இன்றுவரை எந்த ஒரு பெண்ணையுமே கையும் களவுமாக சாரி கண்ணும் சைட்டுமாக பிடித்ததில்லை. ஆனால் சென்ற வாரம் ஒரு பெண் பேருந்தில் பிடிபட்டாள். பேருந்தில் ஓரளவுக்கு கூட்டம். மாலை பள்ளி கல்லூரிகள் விடும் நேரம் என்பதால் பெரும்பாலும் யூனிஃபார்ம்களே தென்பட்டன.
நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த ஒரு பாலிடெக்னிக் மாணவி குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு. நீங்க தப்பா நினைச்சா மாதிரிதான் நானும் நினைச்சேன். ஆனால் அவள் பார்வை ஊடுருவியது அருகில் கும்பலாக நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாணவர் கூட்டத்தை. ஒருவேளை அவளுடைய ஆள் அந்த கூட்டத்துக்குள் இருக்கிறானோ? என்னவோ? என்று நானும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பது போல தலையை மாற்றி மாற்றி அந்த கும்பலையும் அவளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்(விளங்கிடும்....). பசங்க குழுவில் யாரும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. நான் கவனிப்பதை பார்த்ததும் அவள் முகத்தில் வந்ததே பாருங்கள் வெட்கம்.அவளது கண்கள் அலைபாய்ந்து அடங்கவே 5 நிமிடம் ஆனது. "ஹா ஹா மாட்டிக்கொண்டாயா?" என்று என்மனதில் நினைத்துக்கொண்டேன். இந்த சம்பவமே இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்(மறுபடியும் விளங்கிடும்...) என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பேஸ் புக்கில் ரசித்தது.
பேஸ்புக்கில் அவ்வப்போது உலாவுவது உண்டு. அந்த நேரத்தில் கண்ணில் தென்படும் சில பகிர்வுகள் களுக்கென்று சிரிக்க வைத்து விடும். சில நேரம் நம்மை அறியாமல் புன்னைகைக்க வைக்கும். அப்படிபட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர் போலிருக்கு....
என்னே கற்பனை வளம்......வடிவேலு முகம் எல்லாவற்றுக்குமே சரிப்பட்டு வருதே?
இதுவும் ஒருவகையில் உண்மைதானே..... ரஜினி ரசிகர்களே?
இந்த போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் இப்படி அறிவுபூர்வமான கேள்விகள்தான் கேட்பார்கள் போலிருக்கிறது. பதில் அதைவிட அறிவுப்பூர்வமாக இருக்கிறது.....
புன்னகைக்காமல் இருக்க முடியவில்லையே....
இறுதியில் அது நடந்தே விட்டது..... கடந்த மாதம் என்னுடைய பிறந்த தினமான ஜூன் 10 அன்றே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 12இல் திருமணம் என்று நாளும் குறித்து விட்டாயிற்று. இது குறித்து நண்பர்களை வரவேற்று தனி பதிவில் வெளியிடுகிறேன். குடும்பஸ்தன் ஆகும் முன்னரே எத்தனை கட்டளைகள் கண்டிஷன்கள்? இப்போ புரியுதா? பதிவுலகத்துல ஏன் இத்தனை நாளாய் தலை காட்ட முடியவில்லை என்று?
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க நண்பர்களே....
முழுவதும் படிக்க >>