அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தின மற்றும் சன்டிவியின் பத்தொன்பதாவது ஆண்டுவிழா வாழ்த்துக்கள். பதிவுலகத்தால் கவரப்பட்டு, தானும் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன், எழுதவந்து, கொஞ்ச காலத்திலேயே மொக்கை பதிவர் ஆகிவிடுகிறோம். அப்படி ஆகிவந்த ஒரு அரை மொக்கை பதிவர், பாதியில் அலார்ட் ஆகி, பதிவுலகில் புரட்சிகரமான பதிவுகள் எழுதும் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்.
"அண்ணே வணக்கம் ".
"பிச்சுபுடுவேன் பிச்சு, தோழர் அப்படின்னு கூப்பிடு...".
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"இல்ல இப்படி கூப்பிடுறது ஒரு கோட் வேர்ட். கும்பல்ல கலவரம் ஆகும்போது, சில நேரம் நம்மாள்களே நம்மை தாக்க நேரிடும். அப்போ இதை சொன்னா தப்பிச்சுக்கலாம். சரி வந்த விஷயத்தை சொல்லு?"
"அதில்லை அண்ண்.... சாரி தோழரே. இந்த சமுதாயத்துக்கு நான் ஏதாவது செய்யனும். ஒண்ணும் செய்ய முடியாலான்னாலும் அட்லீஸ்ட் ஒரு புரட்சிகர பதிவர் அப்படின்னு பேராவது எடுக்கணும். அதுதான் என்னோட ஆசை. "
"சமுதாயத்துக்கு நல்லது செய்யுறத பத்தி எனக்கு தெரியாது. ஆனா புரட்சிபதிவர் ஆகிறது எப்படின்னு சில ஐடியாக்கள் தரேன் ஓகேவா?"
"சரி சொல்லுங்க நோட் பண்ணிக்கிறேன்"
"உன்னோட வலைப்பக்க லே-அவுட்டை மொதல்ல மாத்து. மொக்கையா ஏதோ க்ரீட்டிங் கார்டு மாதிரி இருக்கு. பாத்த உடனே உணர்ச்சி கொப்பளிக்க வேணாமா?"
"அப்போ நமீதா இல்லைனா ஹன்ஸிகா படம் போடவா?"
"டேய் அப்புறம் உன் பேரு கில்மா பதிவர்னு மாறிடும். ரத்த கலர்ல, திட்டு திட்டா தெரியுர மாதிரி கலரிங் பண்ணு. ஆங்காங்கே கை கால் தலை சிதறி கிடக்குற மாதிரி படம் போடு.."
"அய்யோ தோழா பயமா இருக்கே? இப்படிலாம் போட்டா யார் என் தளத்துக்கு வருவா?"
"நிச்சயமா எவனும் வரமாட்டான். காலங்காத்தால இப்படி ஒரு தளத்தை பார்த்தா விளங்கிடும். ஆனா எல்லோரையும் வரவழைக்கிறதுக்கு வேற வழி இருக்கு. நான் சொல்றத மட்டும் கேளு. குறுக்க கேள்வி எல்லாம் கேட்க கூடாது. புரட்சியாளர் ஆக மொதல் தகுதி, சீனியர் புரட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்காம இருப்பதுதான். புரியுதா?"
(பீதியுடன்) "சரி நீங்க சொல்றமாதிரியே பண்றேன்"
"திங்கள்கிழமை ஹிந்து, செவ்வாய் கிழமை ஒரு சாதி, புதன் கிழமை ஏதாவது ஒரு பெரிய மனிதன். வியாழக்கிழமை முஸ்லிம், வெள்ளி கிழமை மறுபடியும் ஒரு சாதி, சனிக்கிழமை அமெரிக்கா, ஞாயிற்றுகிழமை சீனா."
"புரியலையே... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. "
"திங்கட்கிழமை இந்துக்களை கேவலமாக திட்டி ஒரு பதிவெழுது. அப்புறம் செவ்வாய் கிழமை ஏதாவது ஒரு சாதி, பிராமணர் இல்லை தேவர் ஏதாவது ஒன்றை போட்டு தாக்கு. புதன் கிழமை சச்சின், சூர்யா, ஸ்டீவ்ஜாப்ஸ், பில்கேட்ஸ், பவர்ஸ்டார் என்று ஏதாவது ஒரு பெரிய மனிதரை பற்றி தரக்குறைவாக ஒரு கட்டுரை எழுது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் தோழராக மட்டும் இருந்து விடக்கூடாது. அப்புறம் மன்னிப்பு கேட்கவேண்டி வரும். மன்னிப்பு கேட்பது என்பது நாம் தோழர் சமுதாயத்திலேயே இல்லாத ஒன்று. திங்கட்கிழமை நம் கட்டுரையை படித்து கடுப்பாகி இருக்கும் இந்துக்களை மகிழ்விக்க இப்போது முஸ்லீம்களை கேவலப்படுத்தி ஒரு கட்டுரை. வெள்ளிக்கிழமை மறுபடியும் சாதி வெறி உண்டாக்கும் வகையில் ஒரு கட்டுரை. சனிக்கிழமை அமெரிக்காவை திட்டி ஒரு கட்டுரை. ஞாயிற்றுகிழமை சீனாவுக்கு சொம்படித்து ஒரு கட்டுரை."
"இந்த ஆர்டரில்தான் எழுதணுமா? இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?"
"திங்கள் மற்றும் வெள்ளி, கம்பெனியில் எவனும் வேலை பார்க்க மாட்டான். ஆகவே அப்போதுதான் சும்மா கொழுந்து விட்டு எரியுர மாதிரி கட்டுரை எழுதணும். அதுக்குத்தான் ஹிந்து மற்றும் சாதி வெறி. மற்றபடி மற்ற கட்டுரைகளை எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டுரைகளுக்கு குறைந்தது மூன்றுநாள் இடைவெளி வேண்டும்."
"இந்துக்களை திட்டி விட்டு உடனே முஸ்லீம்களை திட்டினால் நாம் மீது அவநம்பிக்கை வந்துவிடாதா?"
"உனக்கு போதிய அனுபவம் கிடையாது. நம்ம ஊரில் சாதி என்று வந்துட்டா பரம்பரை எதிரி கூட நண்பன் ஆகிடுவான். இன்னிக்கு இந்துவை திட்டி நான் கட்டுரை எழுதுன உடனே எல்லா இந்துக்களும் என்னை எதிரியா நினைப்பான். நாளைக்கே முஸ்லிமை திட்டி நான் எழுதுனா இவன் எல்லாம் எனக்கு நண்பன் ஆகி அவன் எல்லாம் எதிரி ஆகிடுவான்."
"தலைவா நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். ஆமா கிறித்துவர்களை விட்டுட்டீங்களே? அவங்க நம்ம ஆளா?"
"அட நீ வேற. இந்து முஸ்லிம் கட்டுரை எழுது. கமெண்ட் பகுதியில் கிறித்துவர்களையும் போட்டு குதறி விடலாம்."
"அப்புறம் ஒரு முக்கிய விஷயம். சீசனுக்கு ஏத்த மாதிரி சில புதிய கட்டுரைகளை எழுதணும். அதுல ரொம்ப முக்கியம் எப்படியாவது, சாதியை கலக்க மறக்க கூடாது. நாட்டுல டெய்லி ஆயிரக்கணக்குல தப்பு நடக்குது. எல்லா சாதிக்காரனும்தான் தப்பு பண்றான். ஆனால் குறிப்பிட்ட ஒரு தப்பை மட்டும் சுட்டிக்காட்டி, அவன் சாதியை தொண்டி துருவி, நாறடிக்கணும்."
"சரி நாறடிக்கிறதுன்னா என்ன?"
"நாலு கெட்ட வார்த்தை. குறிப்பா தே... ம... கண்டிப்பா இருக்கணும். அது போல, மூத்திரம், மலம் என்று கலந்து விடணும். எந்த சாதியை , மதத்தை, மனிதரை திட்டுகிறாயோ அவரது உருவத்தை கேலி செய்தோ அல்லது அவரது வீட்டு பெண்களை ஆபாசமாக வர்ணித்தோ அல்லது ஒழுக்கத்தை குறிவைத்தோ எழுத வேண்டும்."
"அய்யோ குமட்டுதே.... சரி ஒருவரின் உருவத்தை கிண்டல் பண்றது தப்பில்லை?"
"யார் சொன்னது? சொல்வது தோழராக இருந்தால் தப்பில்லை."
"பெண்களை ஆபாசமாக வர்ணிப்பது அல்லது அவர்களின் கற்பை கேலிக்குள்ளாக்குவது?"
"பெண்ணியம் பேசும் கட்டுரைகளில் மட்டும் பெண்களை உயர்த்தி பேசினால் போச்சு. நமக்கு வேண்டிய 'தோழி'களை மட்டும் மதித்தால் போதும்."
"நமக்கு வேண்டியவர்களே ஒழுக்க கேடாக நடந்தால் என்ன செய்வது?"
"கண்டுக்க கூடாது, யாராவது கேள்வி கேட்டா வந்துட்டாண்டா கலாச்சார காவலன் என்று அவனை கலாய்த்து விடவேண்டும். ஆனால் அதே சமயம் அடுத்த பெண்கள் கற்போடுதான் இருக்கிறார்களா? என்று ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். கடவுளாக இருந்தாலும் விடக்கூடாது. பெண்களை திட்டுவது ஆணாதிக்கம் என்று சொல்லிக்கொண்டே அடுத்தவனின் குடும்பப்பெண்களை திட்டவேண்டும். "
"எனக்கு அவ்வளவா கெட்ட வார்த்தை தெரியாதே?"
"கவலைப்படாதே. நம்ம தளத்தின் முந்தைய பதிவுகளை படித்து தெரிஞ்சுக்கோ."
"ரொம்ப நன்றி தோழா... சரி இப்படி எழுதினால் யாராவது சண்டைக்கு வரமாட்டார்களா?"
"என்ன அப்படி கேட்டுட்ட?, கண்டிப்பா வருவாங்க. அதுக்கு பதிலா நீ நாலு ஐடி கிரியேட் பண்ணி கமெண்ட் போடணும். என்கிட்ட இதுமாதிரி நிறைய பேர் இருக்காங்க. என்கிட்ட சொன்னா உனக்கு உதவி பண்ணுவேன். கமெண்ட் போட்டவன் என்ன சொன்னாலும், அவனது ஜாதி, மதத்தை குறிவைத்தே பேசணும். வந்தவன் துண்டகாணோம் துணியகாணோம் என்று ஓடி விடுவான்."
"அப்புறம் நம்ம தளத்து பக்கம் யாரும் வரமாட்டாங்களே?"
"அங்கதான் நீ தப்பு பன்ற. என்னதான் தர்ம அடி வாங்கினாலும் வரத்தான் செய்வான். ஆனா கமெண்ட் போடமாட்டான். போட வைக்கணும். அங்கதான் உன் திறமை இருக்கு. தர்ம அடி கொடுக்குறவன் அடி வாங்கவும் பயப்படக்கூடாது. 'தோழர்' கோட் வேர்டை பயன்படுத்தினால் தோழர்களிடம் இருந்து அடிவாங்காமல் தப்பிக்கலாம். ஆனால் வர்றவன் போறவன் எல்லாம் அடிப்பான். அந்த மாதிரி சமயங்கள்ல மக்களை திசை திருப்ப, உடனே ரெண்டு மூணு மொக்கை கட்டுரைகளை எழுதிடனும். இல்லை அந்த கட்டுரையை தூக்கிடனும்."
"சரி நம்மாட்களே தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா என்ன பண்றது?"
"அவர்களை போலி தோழர்னு சொல்லிடு. வேறு கேள்வி கேட்கவே முடியாது."
"இந்த போலி சாமியார் மாதிரி கரெக்ட்தானே?"
"போலி சாமியார்னு சொன்னாலும் அவன் சாமியார்தான், இந்துதான்னு அடிச்சு பேசணும். விட்டிட கூடாது. ஆனா போலி தோழர்னு ஒரே வார்த்தையில் விவாதத்தை முடிச்சுடனும்."
"எப்படியோ நாடு நல்ல இருந்தா சரி.... "
"அடி செருப்பால. நாடு நல்ல இருந்தா சரியா? இந்த நாடு நல்லாவே இருக்க கூடாதுடா. அதுதானே எங்க கா கா கீ கீ இயக்கத்தொட நோக்கமே. இந்தியான்னு ஒரு நாடே இருக்க கூடாது. எல்லா ஸ்டேட்டையும் தனி நாடா ஆக்கணும். அப்பத்தான் சீனா ஆக்கிரமிக்க வசதியா இருக்கும்."
"எத்தனை நாள்தான் வாயிலேயே வடை சுடுவது. போராட்டம்னு ஏதாவது நடத்தினாதானே மக்கள் நம்புவாங்க?"
"டேய் இந்த மக்களை பத்தி உனக்கு தெரியாதுடா. நாட்டுல எவன் என்ன பேசினாலும் ஆன்னு வாயை பிளந்துகிட்டு பாப்பாங்க. அடுத்த நிமிஷமே அதை மறந்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க. சொன்னவன் முகம் கூட ஞாபகம் இருக்காது. நாம என்ன பண்ணணும்னா, இங்கே இருந்து பத்தவச்சிக்கிட்டே இருக்கணும். பத்திக்கிட்டா அதை பெரிசா ஊதி விடணும். அதோட வேலை முடிஞ்சது. அதுக்கும் திருப்தி இல்லைனா? டவுன் பஸ்ஸுல டிக்கெட் எடுக்காத போராட்டம், பேண்டுக்குள் ஜட்டி அணியாத போராட்டம், வரலாறு காணாத எழுச்சின்னு... நம்மை நாமே போட்டோ எடுத்து
போட்டுக்க வேண்டியதுதான்."
"ஆகா சூப்பர் தோழரே... இதுவரை கரையாகி இருந்த என் மூளையை நன்றாக சலவை செய்து சுத்தப்படுத்தி விட்டீர்கள்..... "
(சீனியர் தோழர் மனதுக்குள் ... "அப்பாடா இன்னிக்கு ஒருத்தனை தீவிரவாதியா மாத்தியாச்சு.... இன்னிக்கு கோட்டா முடிஞ்சது.")
"சந்தோஷம் தோழரே எனக்கு அவசர வேலை இருக்கு போய்ட்டு வரேன். லேட்டா போனா மொதலாளி திட்டுவார். என்ன இருந்தாலும்
மொதலாளி நமக்கு தெய்வம் இல்லையா?". என்றபடி இருவருமே தாங்கள் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஓடுகிறார்கள்.
(கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டனோ?) உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....