விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 23, 2010

நான் என்ன இளிச்சவாயனா? - பகுதி 2


எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் வெறும் ப்ளாக் படித்த அனுபவமும் சில புத்தகங்கள் படித்த அனுபவம் மட்டும் கொண்டு ப்ளாக் எழுத தொடங்கிய ஒரு வாரத்துக்குள் 1000 ஹிட்ஸ் தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும், வாக்குகள் அளித்து டெபாசிட் போகாமல் காப்பாற்றிய நண்பர்களுக்கும், என் வலைப்பக்கத்துக்கும் வந்து படிப்பதற்கு நேரம் ஒதுக்கி கருத்து தெரிவித்த ஜீவதர்ஷன்(எப்புடி..), கார்க்கி, யோகநாதன், காந்தி, அகோரி மற்றும் அனானி(???) அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி...


பதிவு எழுத தொடங்கி முதல் பதிவாக எழுதிய "நான் என்ன இளிச்சவாயனா?" என் ஆழ் மனதில் தோன்றிய கருத்துக்கள் தாம். ஆனால் உண்மையான கருத்துக்களுக்கு வரவேற்ப்பு உண்டு என்பது நிரூபணமானது. அந்த பதிவின் நீளம் காரணமாக சொல்ல வந்ததை குறைவாகவும் ஒரு நபரை மட்டும் மையமாகவும் கொண்டு சொல்லி விட்டேன். இருந்தாலும் சொல்லாமல் விட்டதையும், பின் தோன்றியதையும் சேர்த்து தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இரண்டாம் பாகம் எழுதி இருக்கிறேன். சத்தியமாக இது தொடர் பதிவோ, அதிகமாக ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்றோ எழுதவில்லை. தோன்றியதை எழுதுகிறேன். 
முதல் பாகத்தில் எழுதப்பட்டது பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியே சொல்லியாகி விட்டது (நான் ஆண் என்பதால்). அதனால் இரண்டாம் பாகம் பொதுவாக் இருக்கும் என நம்புகிறேன். 






பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் மற்றும் இருந்தால் போதாது. ஓரளவுக்கு பொருளாதாரமும் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். வெறும் கையை வைத்துக்கொண்டு முழம் போடா முடியுமா. முழம் போடலாம். பதிவும் போடலாம். வேறு ஒன்னும் செய்து விட முடியாது. சரிதானே. 

 நமக்கு நல்ல மனது. பணமும் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் நாம் இருப்பது ஒரு வெளி நாடு.  அங்கே ஏற்கனவே அரசியல் குழப்பங்கள் கோடி கட்டி பறக்கின்றன. எந்த பிடி கிடைக்கும் எப்படி உச்சாணி கொம்புக்கு தாவலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கிறது. சிக்கினால் போதும் தரை டிக்கெட் எல்லாம் தடி எடுக்கிற தண்டல் காரன் ஆகிவிடும். (அஜித் விஷயத்தில் நடந்த மாதிரி). போதும்டா சாமி. நல்லது செய்யப்போய் உதை பந்து ஆகி விடுவோம். சும்மா இருப்பதே மேல். பொம்பளதானே என்று ஆளாளுக்கு மட்டம் தட்டுகிறார்கள். எகத்தாளம் வேறு. என்ன செய்வது?

பேசாமல் இப்போது இருப்பதே மேல். தேவை இல்லாமல் மாட்டிக்கொள்ள நான் என்ன இளிச்சவாயனா? (மன்னிக்கவும் பெண்பால் தெரியவில்லை).


சேவை செய்ய போகிறேன் என்று தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோது கையில் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது அக்னஸ்-இன் கைகளில். தன்னை காப்பாத்தி கொள்ளும் அளவுக்கு கூட பொருள், பின்புலம் இல்லாத நிலையில் அவரிடம் இருந்தது அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டும் தான்.   தனக்காக யாசகம் கேட்கவே தயங்கும் நேரத்தில் பிறருக்காக தெரு தெருவாக யாசகம் கேட்டு அலைந்தவர். யாசகம் கேட்ட கையில் காறி துப்பியவனை பார்த்து "எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் " என்று சொல்லாமல் "இது எனக்கு போதும். என் குழந்தைகளுக்கு எதாவது கொடுங்கள்." என்று கேட்டவர்.  அவரின் அன்புள்ளத்தை அறியாமல் தெரேசா மத மாற்றம் செய்கிறார் என்று சேற்றை வாரி இறைத்தபோதும், புத்தம் புதிய காரை போப் பரிசாக கொடுத்தபோதும், எந்தவித சலனமும் ஏற்படாமல் தன் சேவையே கண்ணாக இருந்தவர். 


வயதான சொந்த தாய் தந்தையரையே தொட்டு பராமரிக்க கூசும் மனிதர்கள் மத்தியில், தொழு நோயாளிகளை எந்த வித தயக்கமும் இல்லாமல் தொட்டு அரவணைத்தவர். தொழு நோயாளிகளை தொடும் போதெல்லாம் கடவுளையே தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று சொல்வார்.

உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று உண்டென்றால் அது உதாசீனம்தான். அதுவும் நோயால் பீடிக்க படும் போது நம் மனம் நம்முடைய உறவுகளை நோக்கித்தான் செல்லும். அப்போது உதாசீனப்படுத்தப்பட்டால் அது நோயின் வேதனையை விட அதிகமாக வலிக்கும். இதை முழுமையாக உணர்ந்தவர். ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் உண்டு. ஆனால் உலகத்தில் பிறந்த அனைவருக்கும் கிடைத்த ஒரே தாய் .....அன்னை தெரேசா.

இப்போதும் உலக அழகிகள் பட்டம் வெல்ல வேண்டுமா? அவர்கள் சொல்வது "எனக்கு பிடித்த பெண் தெரேசா தான் "
இப்படி பட்டம் வெல்ல மட்டுமே அவர் பெயர் பயன் படக்கூடாது.  

எல்லோராலும் தெரேசா ஆக முடியாது. ஆனால் எல்லோராலும் அன்பு செய்ய முடியும். 

அன்னை அவர்கள் சொன்னது "நீ மனிதர்களை பற்றி மதிப்பீடு  செய்து கொண்டிருந்தால் ஒருக்காலும் அன்பு செய்ய உனக்கு வாய்ப்பிருக்காது"


அன்பு காட்டுவதற்கு பணம் தேவை இல்லை. உள்ளம் நிறைய கருணை இருந்தால் போதும். அன்பு செய்தால் எல்லோரும் தெரேசாவாகலாம் 


பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க..


உங்க கருத்தை இங்க பதிவு பண்ணுங்க ...

1 comments:

Bala said...

@அண்ணாமலையான்

நன்றி அண்ணாமலையான் அவர்களே..

Related Posts Plugin for WordPress, Blogger...